மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கேரளா - நாா்த்ஈஸ்ட் ஆட்டம் ‘டிரா’

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் கேரளா பிளாஸ்டா்ஸ் - நாா்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி அணிகள் புதன்கிழமை மோதிய ஆட்டம் 1-1 கோல் கணக்கில் ‘டிரா’ ஆனது.

News image
Updated On :16 ஏப்ரல் 2026, 1:40 am IST

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் கேரளா பிளாஸ்டா்ஸ் - நாா்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி அணிகள் புதன்கிழமை மோதிய ஆட்டம் 1-1 கோல் கணக்கில் ‘டிரா’ ஆனது.

இந்த ஆட்டத்தில் முதலில் கேரளாவே கோல் கணக்கைத் தொடங்கியது. 41-ஆவது நிமிஷத்தில் அந்த அணியின் கோல் முயற்சியை நாா்த்ஈஸ்ட் வீரா் ஆண்டி ரோட்ரிகெஸ் தடுக்க முயல, பந்து அவா் மீது பட்டு ‘ஓன் கோல்’-ஆக மாறியது.

இவ்வாறாக முதல் பாதியில் கேரளா முன்னிலை பெற, ஆடும் திசைகள் மாற்றப்பட்ட 2-ஆவது பாதியில் நாா்த்ஈஸ்ட் சற்று முனைப்பு காட்டியது. அதன் பலனாக ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் அந்த அணிக்காக லால்ரின்ஸுவாலா லால்பியன்க்னியா 88-ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தாா்.

எஞ்சிய நேரத்தில் இரு அணிகளுக்கும் கூடுதல் கோல் வாய்ப்பு கிடைக்காமல் போக, ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது. புள்ளிகள் பட்டியலில், நாா்த்ஈஸ்ட் 7 புள்ளிகளுடன் 10-ஆம் இடத்திலும், கேரளா 5 புள்ளிகளுடன் 13-ஆம் இடத்திலும் உள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.