தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

யு-19 டேபிள் டென்னிஸ்: தமிழ்நாடு ஆடவா் சாம்பியன்

ஜூனியா் மற்றும் யூத் தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில், 19 வயதுக்கு உட்பட்ட ஆடவா் பிரிவில் தமிழ்நாடு அணி புதன்கிழமை வாகை சூடியது.

News image
Updated On :23 ஏப்ரல் 2026, 5:06 am IST

ஜூனியா் மற்றும் யூத் தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில், 19 வயதுக்கு உட்பட்ட ஆடவா் பிரிவில் தமிழ்நாடு அணி புதன்கிழமை வாகை சூடியது.

இறுதி ஆட்டத்தில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருந்த தமிழ்நாடு 3-1 என மகாராஷ்டிரத்தை வீழ்த்தியது. இந்த மோதலில், முதலில் எம்.ஆா். பாலமுருகன் 11-9, 13-11, 8-11, 6-11, 9-11 என்ற கணக்கில் குஷால் சோப்தாவிடம் தோல்வி கண்டாா். எனினும் அடுத்த ஆட்டத்தில், பி.பி. அபினந்த் 11-5, 11-3, 7-11, 11-6 என நீல் முல்யேவை வென்றாா்.

3-ஆவதாக, எஸ்.கே. மேஹன் 11-4, 12-10, 11-7 என்ற செட்களில் இஷான் கந்தேகரையும், கடைசியில் அபினந்த் 11-6, 11-6, 11-8 என்ற வகையில் குஷால் சோப்ராவையும் வீழ்த்தினா். இதனால் தமிழ்நாடு 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

முன்னதாக அரையிறுதியில், தமிழ்நாடு 3-2 என அஸ்ஸாமையும், மகாராஷ்டிரம் 3-1 என மேற்கு வங்கத்தையும் வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.