பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

டெஸ்ட் அணியில் இணைந்த பாபர் அசாம்..! தொடரை சமன்செய்யும் முனைப்பில் பாகிஸ்தான்!

வங்கதேசத்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட்டில் களமிறங்கிய பாபர் அசாம் குறித்து...

News image

பாபர் அசாம் - படம்: ஏபி

Updated On :16 மே 2026, 12:33 pm IST

வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் பாபர் அசாம் இணைக்கப்பட்டுள்ளார். முதல் டெஸ்ட்டில் பாகிஸ்தான் அணி தோல்வியுற்றது.

தற்போது, இரண்டாவது டெஸ்ட்டில் பாகிஸ்தான் டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. வங்கதேசம் 26 ஓவர்களில் 101/3 ரன்கள் எடுத்துள்ளது.

பாகிஸ்தான் பிரீமியர் லீக்கில் பாபர் அசாம் அணி கோப்பை வென்றது. இந்த சிறப்பான ஃபார்முக்குப் பிறகு பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் பாபர் அசாம் இணைக்கப்பட்டுள்ளார்.

சில்ஹெட்டில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட்டில் பாகிஸ்தான் ஃபீல்டிங் செய்து வருகிறது. முகமது அப்பாஸ் 2 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

வங்கதேசம் சார்பில் நஜ்முல், முஷ்ஃபிகுர் பேட்டிங் செய்து வருகிறார்கள். இந்தப் போட்டியில் பாகிஸ்தான் வென்றால் தொடர் 1-1 என சமநிலையில் முடிவடையும் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஏற்கெனவே, கடந்த போட்டியில் மெதுவாக பந்துவீசியதால் அபராதம் விதிக்கப்பட்டு புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளதும் பாகிஸ்தானுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் பாகிஸ்தான் அணி ஏழாவது இடத்தில் இருக்கிறது. இந்தப் போட்டியில் தோல்வியுற்றால் பாகிஸ்தானின் கேப்டன் பொறுப்பும் மாற்றப்படுமென தகவல் வெளியாகியுள்ளது.

Summary

Babar Azam set for return as Pakistan aim to level series against Bangladesh in second Test

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.