ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு அமைதியாகவும், தெளிவாகவும் இருப்பதாக அந்த அணி வீரர் க்ருணால் பாண்டியா தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் கடந்த மார்ச் 28 ஆம் தேதி தொடங்கியது. தொடரின் முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாதுக்கு எதிராக விளையாடிய நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம், நடப்பு ஐபிஎல் தொடரை ஆர்சிபி வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கடந்த ஆண்டைக் காட்டிலும் அமைதியாக இருப்பதாகவும், அணியில் உள்ள வீரர்கள் அவர்களது பொறுப்பு குறித்து தெளிவாக இருப்பதாகவும் அந்த அணி வீரர் க்ருணால் பாண்டியா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் மிகவும் அமைதியான சூழல் நிலவுவதை உணர்கிறேன். கடந்த ஆண்டு புதிய அணி என்பதால், வீரர்கள் ஒருவரை ஒருவர் நன்றாக தெரிந்துகொள்ள வேண்டியிருந்தது. ஆனால், இந்த ஆண்டு வீரர்கள் பலரும் அணியில் தங்களது ரோல் என்ன என்பதை தெளிவாக புரிந்துகொண்டுள்ளார்கள்.
மிகப் பெரிய தருணங்களில் விளையாடும் சூழல் உருவாகும்போது, கடவுள் மிகப் பெரிய விஷயத்தை கொடுப்பதற்காக அந்த இடத்தில் என்னை விளையாட வைத்துள்ளதாக உணர்கிறேன். சில நேரங்களில் மிகப் பெரிய தருணங்கள் எனக்காக உருவாவதாக நினைக்கிறேன். மிகப் பெரிய தருணங்களில் இருக்கும் அழுத்தத்தை நான் உணர்கிறேன். ஆனால், அந்த மாதிரியான சூழலில் அமைதியாக செயல்பட்டு சிறப்பாக செயல்பட முயற்சிக்கிறேன் என்றார்.
Summary
Royal Challengers Bangalore player Krunal Pandya has stated that the team is calmer and clearer this year compared to last year.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பேட்டர்களின் சவாலை சமாளிப்பது எப்படி? க்ருணால் பாண்டியா பதில்!

ஆடுகளத்தில் குறையல்ல; பந்துவீச்சில் அசத்திய ஆர்சிபி: க்ருணால் பாண்டியா

சிஎஸ்கே ரசிகர் ராஜ்பிரியன் விடியோவை பகிர்ந்த க்ருணால் பாண்டியா!

சாதனைப் பட்டியலில் இடம்பிடித்த ஆல்ரவுண்டர் க்ருணால் பாண்டியா!
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை


