தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு
/

ரியான் பராக் ஃபார்முக்கு வருவார், வெற்றி பெற்றுத் தருவார்: விக்ரம் ரத்தோர்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக் மீண்டும் ஃபார்முக்கு வருவார் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை என அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார்.

News image

ரியான் பராக் - படம் | AP

Updated On :20 ஏப்ரல் 2026, 6:11 pm IST

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக் மீண்டும் ஃபார்முக்கு வருவார் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை என அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் திடலில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

நேற்றையப் போட்டியில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் அணிக்கு சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தும் அந்த அணியால் பெரிய அளவில் இலக்கு நிர்ணயிக்க முடியவில்லை.

நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக் ரன்கள் குவிக்கத் தவறி வருகிறார். இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர், வெறும் 61 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். நேற்றைய ஆட்டத்திலும் அவர் 12 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இந்த நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக் மீண்டும் ஃபார்முக்கு வருவார் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை என அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: என்னைப் பொருத்தவரை ரியான் பராக்கிற்கு சரியான நேரம் அமையவில்லை. எல்லா போட்டிகளிலும் எல்லோரும் ரன்கள் குவிக்க முடியாது. அணியில் சில வீரர்கள் ஃபார்மில் இருப்பார்கள், சிலர் ஃபார்மில் இருக்க மாட்டார்கள். ரியான் பராக் மீண்டு வருவார் என்பதில் எனக்கு எந்தவொரு சந்தேகமும் இல்லை. அவர் கண்டிப்பாக ஃபார்முக்குத் திரும்பி சில போட்டிகளை அணிக்காக வென்று கொடுப்பார்.

ரியான் பராக் மிகவும் நன்றாக விளையாடக் கூடிய திறன் மிகுந்த வீரர். அவருடைய விளையாட்டில் எந்த ஒரு தவறும் இல்லை. காயத்திலிருந்து மீண்டு வந்த அவர், ஐபிஎல் தொடருக்கு முன்பாக குறைந்த அளவிலேயே கிரிக்கெட் விளையாடினார். மேலும், ஐபிஎல் மிகவும் கடினமான தொடர். ஐபிஎல் தொடர் ஒருபோதும் எளிதாக இருக்கப் போவதில்லை. ரியான் பராக் நன்றாக பயிற்சியில் ஈடுபடுகிறார். அவரது சிறப்பான ஆட்டத்தை விரைவில் வெளிப்படுத்துவார் என்றார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் 4 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Rajasthan Royals' batting coach Vikram Rathour has stated that there is no doubt whatsoever that the team's captain, Riyan Parag, will return to form.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.