தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு
/

எங்களது மிடில் ஆர்டர் பேட்டிங் பற்றி கவலையில்லை: ரியான் பராக்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக் பேட்டி குறித்து...

News image

ரியான் பராக். - ANI

Updated On :29 ஏப்ரல் 2026, 6:34 pm IST

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக த்ரில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக் (24 வயது) தங்களது மிடில் ஆர்டர் பற்றி கவலையில்லை எனக் கூறியுள்ளார்.

நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 222/4 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19.2 ஓவர்களில் 228/4 ரன்கள் எடுத்து வென்றது.

இந்தப் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் மிகவும் சிறப்பாக விளையாடினார்கள். குறிப்பாக, கேப்டன் ரியான் பராக் 29 ரன்கள், டோனவன் ஃபெரேரா 52* ரன்கள், ஷுபம் துபே 31* ரன்கள் எடுத்து அசத்தினார்கள்.

இந்த சீசனில் இதுவரை தோல்வியே சந்திக்காத பஞ்சாப் கிங்ஸை ராஜஸ்தான் வீழ்த்தி அசத்தியுள்ளது. முன்னதாக, மிடில் ஆர்டர் பேட்டிங்கில் சொதப்பி வந்ததால் இது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, கேப்டன் ரியான் பராக் கூறியிருப்பதாவது:

அணியாக நாங்கள் என்ன திட்டமிட்டமோ அதற்கான போட்டியாக இதை எடுத்துக்கொள்ளலாம். கடைசி போட்டியில் நாங்கள் செய்த தவறுகள், பிழைகள் எல்லாவற்றையும் இன்று சரியாக செய்தோம். கொஞ்சம் குறைவான ரன்களிலே நாங்கள் பஞ்சாபை கட்டுப்பதினோம் என நினைக்கிறேன். அடுத்த போட்டியில் இன்று விளையாடியதைக் குறித்து விமர்சித்து முன்னேறுவோம்.

எங்களை விட மற்றவர்களுக்குதான் மிடில் ஆர்டர் பிரச்னையாக இருக்கிறது. எல்லாருமே பார்க்கிறார்கள்; கருத்து தெரிவிக்கிறார்கள். நாங்கள் எங்களது வீரர்களை அவர்களது திறமைகளை நம்புகிறோம்.

மிடில் ஆர்டர் விளையாடாதபோது, நம்.3 அல்லது லோயர் ஆர்டர் பேட்டர்கள் அடிக்க வேண்டும். அதனால், அணியாக எங்களுக்கு ஓவ்வொருவர் மீதும் நம்பிக்கை இருக்கிறது. அனைத்து கவலைகளும் வெளியே இருப்பவர்களுக்குதான் இருக்கிறது; எங்களுக்கு அல்ல எனக் கூறினார்.

Summary

That was their concerns, not our concerns says RR captain Riyan Parag about Middle Order batting.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.