பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக த்ரில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக் (24 வயது) தங்களது மிடில் ஆர்டர் பற்றி கவலையில்லை எனக் கூறியுள்ளார்.
நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 222/4 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19.2 ஓவர்களில் 228/4 ரன்கள் எடுத்து வென்றது.
இந்தப் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் மிகவும் சிறப்பாக விளையாடினார்கள். குறிப்பாக, கேப்டன் ரியான் பராக் 29 ரன்கள், டோனவன் ஃபெரேரா 52* ரன்கள், ஷுபம் துபே 31* ரன்கள் எடுத்து அசத்தினார்கள்.
இந்த சீசனில் இதுவரை தோல்வியே சந்திக்காத பஞ்சாப் கிங்ஸை ராஜஸ்தான் வீழ்த்தி அசத்தியுள்ளது. முன்னதாக, மிடில் ஆர்டர் பேட்டிங்கில் சொதப்பி வந்ததால் இது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, கேப்டன் ரியான் பராக் கூறியிருப்பதாவது:
அணியாக நாங்கள் என்ன திட்டமிட்டமோ அதற்கான போட்டியாக இதை எடுத்துக்கொள்ளலாம். கடைசி போட்டியில் நாங்கள் செய்த தவறுகள், பிழைகள் எல்லாவற்றையும் இன்று சரியாக செய்தோம். கொஞ்சம் குறைவான ரன்களிலே நாங்கள் பஞ்சாபை கட்டுப்பதினோம் என நினைக்கிறேன். அடுத்த போட்டியில் இன்று விளையாடியதைக் குறித்து விமர்சித்து முன்னேறுவோம்.
எங்களை விட மற்றவர்களுக்குதான் மிடில் ஆர்டர் பிரச்னையாக இருக்கிறது. எல்லாருமே பார்க்கிறார்கள்; கருத்து தெரிவிக்கிறார்கள். நாங்கள் எங்களது வீரர்களை அவர்களது திறமைகளை நம்புகிறோம்.
மிடில் ஆர்டர் விளையாடாதபோது, நம்.3 அல்லது லோயர் ஆர்டர் பேட்டர்கள் அடிக்க வேண்டும். அதனால், அணியாக எங்களுக்கு ஓவ்வொருவர் மீதும் நம்பிக்கை இருக்கிறது. அனைத்து கவலைகளும் வெளியே இருப்பவர்களுக்குதான் இருக்கிறது; எங்களுக்கு அல்ல எனக் கூறினார்.
Summary
That was their concerns, not our concerns says RR captain Riyan Parag about Middle Order batting.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முத்தரப்பு தொடர்: இந்திய அணியில் ரியான் பராக்கிற்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட்!

குவாலிஃபையர் 2: டாஸ் சுண்டியதில் சர்ச்சை; ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங்!

ரியான் பராக், துருவ் ஜுரெல் அரைசதம்; தில்லி கேபிடல்ஸுக்கு 194 ரன்கள் இலக்கு!

ரியான் பராக் சம்பளத்தில் 25% 'கட்'? ராஜஸ்தான் அணிக்குத் தொடரும் அபராதங்கள்!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

