லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் வீரர் முகுல் சௌதரியின் கிரிக்கெட் பயணம் பலரையும் வியக்க வைக்கதக்கதாக இருக்கிறது.
ஈடர்ன் கார்டன் திடலில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 181/4 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய லக்னௌ அணி 20 ஓவர்களில் 182/7 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது
இந்தப் போட்டியில் 16 ஓவர்களில் 128 ரன்களுக்கு 7 விக்கெட்டுகள் ஆனதும் போட்டி முடிந்துவிட்டதென பலரும் நினைத்தார்கள். ஆனால், இளம் வீரர் முகுல் சௌதரி 27 பந்துகளில் 54 ரன்களை அடித்து நம்பமுடியாத இன்னிங்ஸை விளையாடி ஆட்ட நாயகன் விருது வென்றார்.
முகுல் சௌதரியின் தந்தை தலிப் குமார் சௌதரி தான் பட்ட கஷ்டங்கள் குறித்து பேசியது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. அவர் பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது:
நான் 2003ல் டிகிரி முடித்தேன். அந்த ஆண்டே திருமணம் நடந்தது. எனக்கு மகன் பிறக்க வேண்டுமென ஆசை. அதுவும் நடந்தது. அவனை கிரிக்கெட்டராக்க வேண்டுமென விரும்பினேன்.
முகுலை கிரிக்கெட் பயிற்சி பயிற்சியில் சேர்த்தபோதுதான் என்னிடம் போதுமான அளவுக்கு பணம் இல்லை எனப் புரிந்தது. அதனால், எனது வீட்டை விற்று, ரூ.21 லட்சம் பெற்றேன். அடுத்த ஆண்டு, ஒரு ஹோட்டலை தொடங்கி மற்றுமொரு கடனை வாங்கினேன். ஆனால், என்னால் எனது மாதத் தவணையைச் சரியான நேரத்தில் கட்ட முடியவில்லை. அதற்காக, நான் சிறைக்குக்கூட சென்றிருக்கிறேன். ஆனால், எந்தத் தவறும் செய்யவில்லை.
எனது உறவினர்கள் என்னை கைவிட்டார்கள். அவர்களை என்னை பைத்தியக்காரன் எனக் கூறினார்கள். ‘நீ உனது வாழ்க்கை மட்டுமல்லாமல், உனது மகன் வாழ்க்கையையும் அழிக்கிறாய்’ என்றார்கள். தற்போது, நான் சரியான பாதையில்தான் செல்கிறேன் என்பதை இந்த மோசமான வார்த்தைகள் எனக்கு மேலும் வலுவூட்டுவதாகவே இருக்கின்றன எனக் கூறியுள்ளார்.
முகுல் சௌதரி தோனி மாதிரி ஹெலிகாப்டர் ஷாட் அடித்ததும் ஆட்ட நாயகன் விருதை தந்தைக்கும் தோனிக்கும் சமர்ப்பித்ததும் குறிப்பிடத்தக்கது.
Summary
Mukul Choudhary's father talking about the journey of his son
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிஎஸ்கே வீரர் முகேஷ் சௌதரியின் தாயார் காலமானார்!

பந்துவீச்சாளர்கள் ரிஷப் பந்த்தின் விக்கெட்டினை எடுப்பதில்லை; முன்னாள் வீரர் கூறுவதென்ன?

ஒரு நாளைக்கு 100 - 150 சிக்ஸர்கள்; ஹெலிகாப்டர் ஷாட் குறித்தும் பேசிய முகுல் சௌதரி!

ஆட்ட நாயகன் விருதை எம்.எஸ். தோனிக்கு சமர்ப்பித்த முகுல் சௌதரி!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

