மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஆட்ட நாயகன் விருதை எம்.எஸ். தோனிக்கு சமர்ப்பித்த முகுல் சௌதரி!

லக்னௌ அணியின் இளம் வீரர் முகுல் சௌதரி பேட்டி குறித்து...

News image

வெற்றிக் களிப்பில் முகுல் சௌதரி. - படம்: ஏபி

Updated On :10 ஏப்ரல் 2026, 11:16 am IST

லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் அதிரடியாக விளையாடிய இளம் லக்னௌ வீரர் முகுல் சௌதரி இந்த ஆட்ட நாயகன் விருதை தனது முன்மாதிரி எம்.எஸ். தோனிக்கு சமர்ப்பித்துள்ளது கவனம் பெற்றுள்ளது.

முதலில் பேட்டி செய்த கேகேஆர் அணி 20 ஓவர்களில் 181/ 4 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய லக்னௌ அணி 20 ஓவர்களில் 182/7 ரன்கள் எடுத்து வென்றது.

இந்தப் போட்டியில் 16 ஓவர்களில் 128 ரன்களுக்கு 7 விக்கெட்டுகள் ஆனதும் போட்டி முடிந்துவிட்டதென பலரும் நினைத்தார்கள். ஆனால், இளம் வீரர் முகுல் சௌதரி 27 பந்துகளில் 54 ரன்களை அடித்து நம்பமுடியாத இன்னிங்ஸை விளையாடினார்.

இந்தப் போட்டியில் ஹெலிகாப்டர் ஷாட் அடித்து அசத்தினார். முகுல் சௌதரி ஆட்ட நாயகன் விருது வென்ற பிறகு பேசியிருப்பதாவது:

எம்.எஸ். தோனி ஆட்டத்தை எப்படி முடிப்பார் என பார்ப்பது வழக்கம். அவரைப் போலவே அதே இடத்தில் களமிறங்குகிறேன். எனது இளம் பருவத்தில் அவர் மிகவும் என்னைப் பாதித்துள்ளார். இந்தப் போட்டியை அவருக்கு சமர்ப்பிக்கிறேன் என்றார்.

Summary

Mukul Choudhary Dedicates Ruthless Knock Vs KKR To 'Idol' MS Dhoni.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.