மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஐபிஎல் 2026: 2ஆவது முறையாக பஞ்சாப் கேப்டனுக்கு அபராதம்..! இந்தமுறை ரூ. 24 லட்சம்!

பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனுக்கு அபராதம் விதிக்கப்பட்டது குறித்து...

News image

ஆட்டமிழந்து வெளியேறிய பஞ்சாப் அணியின் கேப்டன். - படம்: ஏபி

Updated On :4 ஏப்ரல் 2026, 12:04 pm IST

ஐபிஎல் 2026 சீசனில் இரண்டாவது முறையாக பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அபராதம் விதிக்கப்பட்டது.

முதல்முறையாக ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், இரண்டாவது முறையாக ரூ.24 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

சேப்பாக்கத்தில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட்டிங் செய்து 209/5 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 18.4 ஓவர்களில் 210/5 ரன்கள் எடுத்து வென்றது.

இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி மெதுவாக பந்துவீசியதற்காக அணியின் கேப்டனுக்கு ரூ.24 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது முறை என்பதால் இந்தத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் நடத்தை விதிகள் 2.22ஐ மீறியதற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அணியின் மற்ற வீரர்களுக்கும் (இம்பாக்ட் வீரர் உள்பட) 6 லட்சம் அல்லது போட்டி ஊதியத்தில் இருந்து 25 சதவிகிதம் அபராம் விதிக்கப்பட்டதாக ஐபிஎல் செய்தித் தொடர்பகம் தெரிவித்துள்ளது.

Summary

PBKS captain Shreyas Iyer fined for slow over rate vs CSK.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.