மோசமாக செயல்படும் சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃபிளெமிங்கை சிஎஸ்கே ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
பந்துவீச்சில் மிகவும் மோசமாக செயல்பட்ட சிஎஸ்கே அணி 210 ரன்களை கட்டுப்படுத்த முடியாமல் தனது சொந்த மண்ணில் தோல்வியுற்று மீண்டும் அதிர்ச்சி அளித்தது.
நேற்றிரவு சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 209/5 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய பஞ்சாப் அணி 18.4 ஓவர்களில் 210/5 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
முக்கியமாக சிஎஸ்கே அணித் தேர்வு குறித்து பலரும் கடுமையான விமர்சனத்தை முன்வைக்கிறார்கள். ஏலத்திலும் நல்ல அனுபவம் மிக்க வீரர்களை எடுக்காமல், அனுபமற்ற பந்துவீச்சாளர்களை எடுத்தது விமர்சிக்கப்பட்டு வருகிறது.
கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் யாரை பந்து வீச அழைப்பது என்பது தெரியாமல் திணறுகிறார். டி20 உலகக் கோப்பையில் பந்துவீசிய ஷிவம் துபேக்கு ருதுராஜ் அந்த வாய்ப்பை வழங்காதது பேசுபொருளாகியுள்ளது.
ஜடேஜாவுக்கு மாற்றாக ரூ.14 கோடிக்கு எடுக்கப்பட்ட பிரசாந்த் வீர் இதுவரை ஒரு பந்து கூட வீசவில்லை என்பது விமர்சனத்தை எழுப்பியுள்ளது.
இதுவரை ருதுராஜ் தலைமையில் சிஎஸ்கே அணி மிக மோசமாகவே விளையாடியுள்ளது. கடைசி 6 போட்டிகளிலும் அவர் தலைமையில் தோல்வியுற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் சிஎஸ்கே வீரர்கள் பலரும் இது குறித்து தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள். அம்பத்தி ராயுடு, “சென்னையின் உடல்மொழி சரியில்லை. அணித் தேர்வு, பேட்டிங் லைன் அப், அதைச் சரியாக உபயோகப்படுத்துவதில்லை, பந்துவீச்சிலும் மோசமாக செயல்படுகிறார்கள். இதையெல்லாம் சரிசெய்தால்தான் சிஎஸ்கே அணி வெற்றி பெற முடியும்” என்றார்.
Summary
Will the CSK Captain Rututraj and Coach Stephen Felmming Resign?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிஎஸ்கேவின் வரலாற்று வெற்றியை முகேஷ் சௌதரிக்குச் சமர்ப்பித்த கேப்டன் ருதுராஜ்!

காயம்பட்ட சிங்கங்கள்..! சிஎஸ்கே கேப்டனின் வாக்குறுதி!

ஜென்டில்மேன் தோனி..! ருதுராஜ் கெய்க்வாட் பகிர்ந்த சுவாரசியம்!
தொடக்க வீரர்களில் மாற்றம்..! சிஎஸ்கே கேப்டன் அறிவிப்பு!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

