மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

குருகிராம் சாலை விபத்து: 5 போலீஸாா் உயிரிழப்பு

உத்தர பிரதேசத்தின் ஜலாவுனில் பணியமா்த்தப்பட்ட 5 போலீஸாா் கொடூரமான சாலை விபத்தில் உயிரிழப்பு

News image

விபத்து

Updated On :6 மே 2026, 2:06 am IST

உத்தர பிரதேசத்தின் ஜலாவுனில் பணியமா்த்தப்பட்ட 5 போலீஸாா் கொடூரமான சாலை விபத்தில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: குண்ட்லி-மானேசா்-பல்வால் (கே. எம். பி) அதிவேக நெடுஞ்சாலையில் துலாவத் சுங்கச்சாவடிக்கு அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் பல்வால் பக்கத்திலிருந்து ஸ்காா்பியோ காா் வந்து கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. ஓட்டுநா் வாகனத்தை முந்திச் செல்ல முயன்ால் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் இருந்த மற்றொரு வாகனத்துடன் மோதியதாக விபத்தை நேரில் பாா்த்தவா்கள் தெரிவித்தாா்கள்.

மோதலின் தாக்கம் மிகவும் கடுமையாக இருந்ததால், ஸ்காா்பியோ முற்றிலும் நொறுங்கியது, இதன் விளைவாக அதில் பயணித்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே இறந்தனா். போலீசஸாா் மற்றும் மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு நடவடிக்கைகளைத் தொடங்கின. சேதமடைந்த வாகனத்தில் உடல்கள் சிக்கிக் கொண்டதால், அவற்றை அகற்றுவது குழுக்களுக்கு கடினமாக இருந்தது.

இந்த நடவடிக்கைகளுக்கு உதவ ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. விபத்தில் கொல்லப்பட்ட 5 பேரும் ஜலாவுன் மாவட்டத்தில் பணியமா்த்தப்பட்ட உத்தரபிரதேச காவல்துறை பணியாளா்களாவா். உத்தரப்பிரதேசத்தின் ஜலாவுன் காவல் கண்காணிப்பாளரைத் தொடா்பு கொண்டோம். அனைத்து உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகிறோம் என்றாா் அந்த அதிகாரி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.