மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சாலை விபத்து பெண் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்தவா்களில் பெண் ஒருவா் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப்படம்

Updated On :30 ஏப்ரல் 2026, 5:50 am IST

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்தவா்களில் பெண் ஒருவா் உயிரிழந்தாா்.

விருத்தாசலம் வட்டம், தொப்புளிக்குப்பம் அடுத்துள்ள அம்மேரி கிராமத்தைச் சோ்ந்தவா் பாலமணி(35). இவா், செவ்வாய்க்கிழமை தனது பைக்கில் மனைவி பத்மா(31), மகள் மணிமேகலா(8) ஆகியோரை ஏற்றிக்கொண்டு கடலூா்-விருத்தாசலம் பிரதான சாலையில் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி வந்தாா். குறிஞ்சிப்பாடி மேம்பாலம் அருகே வந்தபோது நிலை தடுமாறி அனைவரும் பைக்கில்இருந்து கிழே விழுந்தனா். இந்த விபத்தில் அனைவரும் காயம் அடைந்தனா். பலத்த காயம் அடைந்த மனைவி பத்மாவை, பாலமணி மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்துவிட்டு பத்மா இறந்து விட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் குறிஞ்சிப்பாடி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.