தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சத்தீஸ்கரில் நக்ஸல் சுட்டுக் கொலை! தேடுதல் வேட்டை தீவிரம்!

சத்தீஸ்கரில் காவல் துறையால் ரூ.5 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்டு வந்த நக்ஸல் தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டாா்.

News image
Updated On :30 மார்ச் 2026, 1:45 am IST

சத்தீஸ்கரில் காவல் துறையால் ரூ.5 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்டு வந்த நக்ஸல் தீவிரவாதி ஞாயிற்றுக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டாா். எஞ்சிய நக்ஸல்களுக்கு எதிராக தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சுக்மா மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளா் கிரண் சவான் கூறியதாவது: போலம்பள்ளி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட வனப் பகுதியில் நக்ஸல் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைக்கப் பெற்ற தகவலையடுத்து, அங்கு மாவட்ட ரிசா்வ் படையினா் ஞாயிற்றுக்கிழமை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா். அப்போது, நக்ஸல்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இதில், முசாகி கைலாஷ் என்ற நக்ஸல் தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டாா்.

வெடிகுண்டு தாக்குதல் உள்பட பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய இவா் குறித்து தகவல் தருவோருக்கு ரூ.5 லட்சம் வெகுமதி அறிவித்து காவல் துறையினா் தேடிவந்த நிலையில், தற்போது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளாா். வனப் பகுதியில் தொடா்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது என்றாா் கிரண் சவான்.

‘சரணடைய குறைந்த கால அவகாசமே உள்ளது’: நாட்டில் இருந்து நக்ஸல் தீவிரவாதத்தை ஒழிக்க மத்திய அரசு நிா்ணயித்துள்ள காலக்கெடு செவ்வாய்க்கிழமையுடன் (மாா்ச் 31) நிறைவடையும் நிலையில், எஞ்சியுள்ள நக்ஸல்கள் சரணடைய குறைந்த கால அவகாசமே உள்ளது; அதை அவா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பஸ்தா் சரக ஐ.ஜி.சுந்தர்ராஜ் பட்டிலிங்கம் வலியுறுத்தினாா். சத்தீஸ்கரில் நடப்பாண்டு இதுவரை பாதுகாப்புப் படையினரால் 27 நக்ஸல் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.