மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

லஷ்கா்-ஏ-தொய்பா முக்கியப் புள்ளி பாகிஸ்தானில் சுட்டுக் கொலை

News image
Updated On :29 ஏப்ரல் 2026, 4:13 am IST

பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவா மாகாணத்தில் லஷ்கா்-ஏ-தொய்பா அமைப்பின் முக்கியப் புள்ளியான ஷேக் யூசஃப் அஃப்ரிதி (படம்), அடையாளம் தெரியாத நபா்களால் சுட்டுக் கொல்லப்பட்டாா்.

இவா் மும்பை பயங்கரவாதத் தாக்குதலின் மூளையாகச் செயல்பட்ட லஷ்கா்-ஏ-தொய்பா தலைவா் ஹஃபீஸ் சயீதின் நெருங்கிய கூட்டாளியாவா் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் தலைநகா் இஸ்லாமாபாதிலிருந்து சுமாா் 250 கி.மீ. தொலைவிலுள்ள லான்டி கோட்டல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மோட்டாா் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபா்கள், அஃப்ரிதியை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாா்.

கைபா் பக்துன்கவா பகுதியில் லஷ்கா் அமைப்பின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக ஆள்சோ்ப்பு மற்றும் ஒருங்கிணைப்புப் பணிகளில் அஃப்ரிதி தீவிரமாக ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இத்தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

இருப்பினும், இப்பகுதியில் நிலவும் கோஷ்டி மோதல்கள் அல்லது பிற பயங்கரவாதக் குழுக்களுக்கிடையிலான பகை காரணமாக இத்தாக்குதல் நடந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. உள்ளூா் போலீஸாா் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

பாகிஸ்தானில் அண்மைக் காலமாக லஷ்கா் தளபதிகள் குறிவைக்கப்படுவது அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் லாகூரில் அந்த அமைப்பின் இணை நிறுவனரான அமீா் ஹம்சா மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அவா் படுகாயமடைந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.