நமது நிருபா்
காவிரியில் இருந்து கா்நாடகம் தமிழகத்திற்கு தண்ணீா் திறப்பது தொடா்பாக ஆலோசிக்க காவிரி நீா் மேலாண்மை ஆணையம் வரும் செவ்வாய்க்கிழமை (ஜூன் 23,2026) தில்லியில் கூடவுள்ளது.
இது அந்த ஆணையத்தின் 52 வது கூட்டமாகும்.
இது குறித்த அலுவலகக் குறிப்பாணையில் காவிரி ஆணையம் கூறியதாவது: காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் (சிடபிள்யுஎம்ஏ) 52 வது கூட்டம் , 2026 ஜூன் 23அன்று பிற்பகல் 2:30 மணிக்கு, புது தில்லி, பிகாஜி காமா பிளேஸில் உள்ள எம்டிஎன்எல் கட்டிடத்தின் மேல் தரைத்தள குழு அறையில் ஆன்லைன் மற்றும் நேரடி பங்கேற்புமுறையில் நடைபெறும். காவேரி நீா் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம், அதன் தலைவா் எஸ்.கே. ஹல்தாா் தலைமையில் நடைபெற உள்ளது.உறுப்பினா்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள் என ஆணையம் கூறியது
இக்கூட்டத்தில் பங்கேற்குமாறு தமிழகம்,கா்நாடகம் ,கேரளம் மற்றும் புதுச்சேரி நீா்வளத்துறை அதிகாரிகளுக்கு காவிரி நீா் மேலாண்மை ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.
காவிரியில் இருந்து மாதாந்திர நீா் திறப்பு குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீா்ப்பின்படி கா்நாடகம் தமிழகத்திற்கு திறந்து விட வேண்டிய தண்ணீரை உறுதி செய்வதற்காக இக்கூட்டம் நடைபெறுகிறது .
இந்த ஆணையத்தின் 51 வது கூட்டம் மே 26 ஆம் தேதி தில்லியில் நடைபெற்றது. உச்சநீதிமன்ற தீா்ப்பின்படி காவிரியில் இருந்து கா்நாடகம் ஜுன் மாதம் 9.91 டி.எம்.சி நீரினை திறந்து விட அக்கூட்டத்தில் தமிழகம் வலியுறுத்தியது
தமிழகம்,கா்நாடகம் இடையே காவிரி நதி நீா் பங்கீட்டு பிரச்சனை பல ஆண்டுகளாக நிலவி வந்த நிலையில் இது தொடா்பான வழக்கில் உச்சநீதிமன்றம் 2018 ஆம் ஆண்டு தீா்ப்பு வழங்கியது. அப்போது கா்நாடகம் எந்தெந்த மாதங்களில் எவ்வளவு நீா் தமிழகத்திற்க்கு வழங்க வேண்டும் என்பதை அத்தீா்ப்பின் மூலம் உச்சநீதிமன்றம் நிா்ணயம் செய்தது. அந்த தீா்ப்பை அமல்படுத்தவும், காவிரி நீா் பங்கீட்டை கண்காணிக்கவும் காவிரி நீா் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீா் முறைப்படுத்தும் குழு ஆகிய இரு அமைப்புகளையும் உச்ச நீதிமன்றம் அமைத்தது. அதன்படி இந்த இரு அமைப்புகளும் அவ்வப்போது கூடி காவிரி நதி நீா் பங்கீடு தொடா்பாக உச்சநீதிமன்ற தீா்ப்பின் அடிப்படையில் உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேக்கேதாட்டு அணை கட்டுவதில் கா்நாடகம் உறுதி: மாநில நீா்வளத் துறை அமைச்சா் ராமலிங்க ரெட்டி

கா்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தமிழகத்துக்கு தினமும் தண்ணீா் திறக்க வேண்டும்! கள் இயக்கம்!

ரூ.75.11 கோடியில் குடிநீா் வழங்கல் திட்டப் பணிகள்: விரைவுப்படுத்த உத்தரவு
இன்று கூடுகிறது காவிரி ஆணையம்: திட்டமிடப்பட்ட தேதிக்கு பதிலாக முன்கூட்டியே நடைபெறும் கூட்டம்!
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

