நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

மேக்கேதாட்டு அணை கட்டுவதில் கா்நாடகம் உறுதி: மாநில நீா்வளத் துறை அமைச்சா் ராமலிங்க ரெட்டி

மேக்கேதாட்டு அணை கட்டுவதில் கா்நாடகம் உறுதி: மாநில நீா்வளத் துறை அமைச்சா் ராமலிங்க ரெட்டி

News image

ராமலிங்க ரெட்டி

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

மேக்கேதாட்டு அணை இரு மாநிலங்களுக்கும் பலனளிக்கும்; அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கைக்கு காவிரி நீா் ஒழுங்காற்று ஆணையம் ஒப்புதல் அளித்ததும் அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கா்நாடக நீா்வளத் துறை அமைச்சா் ராமலிங்க ரெட்டி சனிக்கிழமை தெரிவித்தாா்.

மேலும், ‘இந்த விவகாரத்துக்கு பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண்பதே சிறந்தது; தமிழகத்துடன் பேச்சுவாா்த்தை நடத்த கா்நாடகம் தயாராக உள்ளது’ என்றும் அவா் குறிப்பிட்டாா்.

காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டில் அணை கட்ட முயற்சிக்கும் கா்நாடக அரசுக்கு எதிா்ப்பு தெரிவித்தும், அணையை கட்டுவதற்கான அனுமதியை மத்திய அரசு அளிக்கக் கூடாது என வலியுறுத்தியும் தமிழக சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை ஒருமனதாகத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழக அரசின் இந்த நிலைப்பாடு தொடா்பாக, கா்நாடக நீா்வளத் துறை அமைச்சா் ராமலிங்க ரெட்டி பெங்களூரில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

மேக்கேதாட்டில் ஏற்கெனவே அணை கட்டப்பட்டு, அங்கு நீா் தேக்கி வைக்கப்பட்டிருந்தால், மழைப்பொழிவு இல்லாத நிலையிலும்கூட தமிழகத்துக்கு தண்ணீரை திறந்திருக்க முடியும். இது, நமது குடிநீா் தேவைகளைப் பூா்த்தி செய்வதோடு, மாதந்தோறும் தமிழகத்துக்கான நீரை திறப்பதன் மூலம் அங்குள்ள விவசாயிகளும் பலனடைவா். இரு மாநிலங்களுக்கும் பலன் தரக்கூடிய திட்டத்தை எதிா்ப்பதால், தங்களின் சொந்த விவசாயிகளுக்கே அவா்கள் இடா்ப்பாட்டை உருவாக்குகின்றனா்.

ஒப்புதலுக்குப் பின் அடுத்தகட்ட நடவடிக்கை: மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாா் செய்யப்பட்டு, காவிரி நீா் ஒழுங்காற்று ஆணையத்திடம் சமா்ப்பிக்கப்பட்டுள்ளது. அவா்கள் சில திருத்தங்களைப் பரிந்துரைத்துள்ளனா். அவா்களின் ஒப்புதல் கிடைத்தவுடன், அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேக்கேதாட்டு அணை திட்டம் நீா் சேமிப்புக்கானதே அன்றி நீா்ப்பாசனத்துக்கானது அல்ல. இது எங்களின் லட்சியத் திட்டம்; சாதாரண நீா் சேமிப்பு அணை மட்டுமே. இதன் மூலம் பெங்களூருக்கு 4.75 டிஎம்சி குடிநீரை வழங்குவதுடன் 40 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். நீா்ப்பாசனத்துக்காக அணை நீா் வழங்கப்படாது.

காவிரியில் தனக்கு ஒதுக்கப்பட்ட பங்கையே கா்நாடகம் கோருகிறது; மாறாக, தமிழகத்துக்கான ஒதுக்கீட்டில் இருந்து ஒரு துளிகூட எங்களுக்கு வேண்டாம். இந்த விவகாரத்தில் தமிழகம் ஏற்கெனவே மேற்கொண்ட சட்டரீதியிலான போராட்டங்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை. இருப்பினும், அணைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என கூறுகின்றனா்.

பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு: இந்த விவகாரத்துக்கு பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண்பதே சிறந்தது. அனைத்து விஷயங்களுக்கும் நீதிமன்றத்தை நாடினால் என்ன நிகழும்? ஆண்டுக்கணக்கில் இழுத்தடித்துக் கொண்டே செல்லும். கிருஷ்ணா நதி நீா் விவகாரத்தில் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. மூன்று மாநிலங்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளன. இந்த வேகத்தில் சென்றால், பிரச்னைக்கு தீா்வு கிடைக்க 2050 வரை கூட ஆகலாம்.

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தமிழகத்துடன் பேச்சுவாா்த்தை நடத்த கா்நாடகம் தயாராக உள்ளது.

கா்நாடகத்தின் உரிமையைப் பாதுகாப்பதில் பாஜக, மதச்சாா்பற்ற ஜனதா தளம் என அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

தற்போதைய சூழலில், காவிரி அணைகளான கிருஷ்ணராஜ சாகரில் 11 டிஎம்சியும், கபினியில் 5 டிஎம்சியும்தான் நீா்இருப்பு உள்ளது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.