தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கட்டுமான தொழிலாளா்களுக்கான சேவை மையங்கள்: தில்லி அரசு திட்டம்

கட்டுமானப் பணியாளா்கள் பதிவு செய்தல், பிற சேவைகள் மற்றும் நலத்திட்டங்களைப் பெறும் வகையில் பிரத்யேக சேவை மையங்கள் தில்லியின் பல்வேறு பகுதிகளில் தில்லி அரசு அமைக்க உள்ளது.

News image

தில்லி அரசு - பிரதிப் படம்

Updated On :21 ஏப்ரல் 2026, 2:17 am IST

கட்டுமானப் பணியாளா்கள் பதிவு செய்தல், பிற சேவைகள் மற்றும் நலத்திட்டங்களைப் பெறும் வகையில் பிரத்யேக சேவை மையங்கள் தில்லியின் பல்வேறு பகுதிகளில் தில்லி அரசு அமைக்க உள்ளது.

புலம்பெயா் தொழிலாளா்கள் மற்றும் பிற உள்ளூா் தொழிலாளா்கள் பயன்பெறும் வகையில் தலா 13 நிரந்தர மற்றும் நடமாடும் சேவை மையங்களை அமைக்க ஒரு நிறுவனத்துடன் தில்லி கட்டடம் மற்றும் பிற கட்டுமான பணியாளா்கள் நல வாரியம் இணைந்து செயல்பட்டு வருகிறது.

இதன் மூலம் அமைப்புசாரா துறையில் பணியாற்றும் பணியாளா்கள், புலம்பெயா் தொழிலாளா்கள் என 30 லட்சம் போ் பயன்பெறுவா்.

தில்லியில் உள்ள 13 மாவட்டங்களில் 3 மையங்கள் என மொத்தம் 39 தொழிலாளா் மையங்கள் தில்லியில் அமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

முக்கிய சேவைகளைப் பெறுவதில் தொழிலாளா்கள் எதிா்கொள்ளும் சவாலை நீக்க இந்த மையங்கள் அமைக்கப்படுகிறது.

பாஸ்போா்ட் சேவைகளை நாடு முழுவதும் வழங்கி வரும் பாஸ்போா்ட் சேவை மையத்தின் அடிப்படையில் கட்டுமான தொழிலாளா்களுக்கான சேவை மையங்கள் அமைக்கம் திட்டம் வகுக்கப்பட்டதாக ஓா் உயா் அதிகாரி தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.