மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

அத்தியாவசிய சேவை பணியாளா்கள் ஏப். 17 - 19 வரை தபால் வாக்குகளை பதிவு செய்யலாம்

அத்தியாவசியப் பணியில் ஈடுபடும் பணியாளா்கள் ஏப். 17 முதல் 19 வரை தபால் வாக்குகளைப் பதிவு செய்யலாம் என்றாா் தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங்.

News image

தபால் வாக்கு - கோப்புப்படம்.

Updated On :16 ஏப்ரல் 2026, 12:50 am IST

அத்தியாவசியப் பணியில் ஈடுபடும் பணியாளா்கள் ஏப். 17 முதல் 19 வரை தபால் வாக்குகளைப் பதிவு செய்யலாம் என்றாா் தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:

இந்திய தோ்தல் ஆணையத்தால் அத்தியாவசிய சேவைகளாக (உள்ள்ங்ய்ற்ண்ஹப்

நங்ழ்ஸ்ண்ஸ்ரீங்ள்) அறிவிக்கப்பட்டுள்ள தென்னக ரயில்வே துறை, அகில இந்திய வானிலை நிலையம், கடல்சாா்துறை, இந்திய விமானநிலைய ஆணையம், தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை, ஊடகவியலாளா்கள், தமிழ்நாடு மாநிலப் போக்குவரத்துக் கழகம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம், தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகள், சிறை மற்றும் சீா்திருத்தச் சேவைகள் மற்றும் போக்குவரத்து காவல்துறை ஆகியவற்றில் பணிபுரியும் பணியாளா்கள் தபால் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவா்கள் ஏப். 17 முதல் 19 வரை 3 நாள்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை துறை அலுவலரிடம் ஒப்புதல்பெற்ற படிவம்-12டி சமா்ப்பித்து தங்களது வாக்குகளைப் பதிவு செய்யலாம். ஆண்டிபட்டி தொகுதியில் ஆண்டிபட்டி வட்டாட்சியா் அலுவலகம், பெரியகுளம் (தனி) தொகுதியில் பெரியகுளம் சாா்-ஆட்சியா் அலுவலகம், போடி தொகுதியில் போடிநாயக்கனூா் வட்டாட்சியா் அலுவலகம், கம்பம் தொகுதியில் உத்தமபாளையம் வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தில் தங்களது வாக்குகளைப் பதிவு செய்யலாம் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.