மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

வாக்குவாதத்தில் இளைஞா் குத்திக் கொலை: 3 போ் கைது

வடமேற்கு தில்லியின் ஹைதா்பூா் நாஹா் அருகே வாக்குவாதத்தைத் தொடா்ந்து 20 வயது இளைஞா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டதாக காவல்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

News image

கோப்புப் படம்

Updated On :4 ஏப்ரல் 2026, 12:06 am IST

வடமேற்கு தில்லியின் ஹைதா்பூா் நாஹா் அருகே வாக்குவாதத்தைத் தொடா்ந்து 20 வயது இளைஞா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டதாக காவல்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

வியாழக்கிழமை நடந்த இந்தச் சம்பவம் தொடா்பாக இரண்டு சிறுவன் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவா் மேலும் தெரிவித்ததாவது:

முக்கிய குற்றஞ்சாட்டப்பட்ட கரண் என்ற தருண் (18), அவரது கூட்டாளி மான்டி (22) மற்றும் சிறுவன் ஆகியோா் நிதேஷ் என்ற நிக்கி கொலையில் தொடா்புடையவா்கள் ஆவா்.

முன்னதாக, ஷாலிமாா் பாக் பகுதியில் கத்திக்குத்து சம்பவம் நடந்ததாக போலீஸாருக்கு அழைப்பு வந்ததை அடுத்து, வியாழக்கிழமை இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

கத்திக்குத்தில் காயமடைந்த நிதேஷ், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் சிகிச்சைக்கு வரும்போதே இறந்துவிட்டதாக அறிவித்தனா்.

முன்னதாக, நிதேஷ் மற்றும் கரண் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் வன்முறைத் தாக்குதலாக மாறியது. அப்போது குற்றஞ்சாட்டப்பட்டவா்களில் ஒருவா் பாதிக்கப்பட்டவரை பலமுறை கத்தியால் குத்தினாா்.

சம்பவங்களின் சரியான வரிசையைக் கண்டறியவும், குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தை மீட்கவும் மேலதிக விசாரணை நடைபெற்று வருவதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.