தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு
/

குட்கா விலை தொடா்பான தகராறில் இளைஞா் கத்தியால் குத்திக் கொலை

குட்கா விலை தொடா்பான தகராறில் இளைஞா் கத்தியால் குத்திக் கொலை

News image
Updated On :5 ஏப்ரல் 2026, 1:26 am IST

வடமேற்கு தில்லியின் ஆசாத் நகா் மண்டி பகுதியில், குட்கா விலை தொடா்பாக ஏற்பட்ட தகராறின்போது, தேநீா்க் கடைக்காரரால் 35 வயது மதிக்கத்தக்க இளைஞா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டதாகக் காவல்துறையினா் தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:

கொலை செய்யப்பட்ட நபா், உத்தர பிரதேச மாநிலம் சஹாரன்பூரைச் சோ்ந்த ஓட்டுநரான நஜிம் என அடையாளம் காணப்பட்டாா்.

தில்லியின் லிபாஸ்பூா் பகுதியைச் சோ்ந்த 19 வயது தேநீா் விற்பனையாளரான ராகுல் என்பவருடன், குட்கா விலை தொடா்பாக நஜிமுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. அப்போது, ராகுல் நஜிமை கத்தியால் குத்தினாா்.

இதில் காயமடைந்த நஜிம் உடனடியாக பாபு ஜக்ஜீவன் ராம் நினைவு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவா் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் அறிவித்தனா்.

இச்சம்பவம் தொடா்பாகக் குற்றஞ் சாட்டப்பட்ட நபா் கைது செய்யப்பட்டுள்ளாா். குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதமும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, காவல்துறையினா் மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.