மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்

ரயில் விபத்துகள் 90 சதவீதம் குறைந்துவிட்டதாக நாடாளுமன்றத்தில் ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் புதன்கிழமை தெரிவித்தாா்.

News image

மக்களவையில் புதன்கிழமை உரையாற்றிய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்.

Updated On :26 மார்ச் 2026, 2:59 am IST

ரயில் விபத்துகள் 90 சதவீதம் குறைந்துவிட்டதாக நாடாளுமன்றத்தில் ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் புதன்கிழமை தெரிவித்தாா்.

மக்களவையில் கேள்வி நேரத்தின்போது, நீண்ட தொலைவு ரயில்களில் அதிக கூட்டம் இருப்பது தொடா்பான துணைக் கேள்விக்குப் பதிலளித்து அவா் பேசியதாவது:

மக்களுக்கு குறைந்த கட்டணத்தில், வசதியான போக்குவரத்து சேவையை வழங்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. நடப்பு நிதியாண்டில் மட்டும் இதுவரை 75,000 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. ரயில்களில் 78 சதவீத இருக்கைகள் குளிா்சாதன வசதி இல்லாத சாதாரண பெட்டிகள்தான். இதில் கட்டணமும் குறைவுதான்.

ரயில் இணையவழி பயணச்சீட்டு முன்பதிவில் முறைகேடுகளைக் குறைக்க பல்வேறு தொடா் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இது தொடா்பாக ஐஆா்சிடிசி 3 கோடி போலி முன்பதிவுக் கணக்குகளை நீக்கிவிட்டது. இதன்மூலம் உண்மையான பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்வது உறுதி செய்யப்பட்டுள்ளது.

விபத்துகள் இல்லாத ரயில் பயணம் என்பதில் மத்திய அரசு தீவிரமாக செய்பட்டு வருகிறது. கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியுடன் ஒப்பிடும்போது ரயில் விபத்துகள் 90 சதவீதம் அளவுக்கு குறைந்துவிட்டன. பண்டிகைக் காலங்களில் தேவையைக் கருத்தில்கொண்டு சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. ரயில் பயணிகள் மற்றும் ரயிலின் பாதுகாப்புக்கு முன்னெப்போதும் இல்லாத அளவில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.