தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு
/

புல்லட் ரயில் திட்டம்! சென்னையிலிருந்து பெங்களூருக்கு வெறும் 73 நிமிடங்களில்...

சென்னை - பெங்களூரு இடையே புல்லட் ரயில் சேவையால் பயண நேரம் 73 நிமிடங்களாகக் குறைக்கப்படும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேச்சு

News image

புல்லட் ரயில் - பிரதிப் படம்

Updated On :28 ஏப்ரல் 2026, 9:43 pm IST

சென்னை - பெங்களூரு இடையேயான புல்லட் ரயில் சேவையால் பயண நேரம் 73 நிமிடங்களாகக் குறைக்கப்படும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு தரவு மையத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசியதாவது, "புல்லட் ரயில் நம் அனைவரின் கனவுத் திட்டம். இந்தச் சேவை, நமது பயண நேரத்தைக் குறைத்து, முக்கிய நகரங்களைக் கொண்ட ஒரு ஒருங்கிணைந்த பொருளாதார மண்டலத்தை உருவாக்கும்.

நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - PTI

புல்லட் ரயில் சேவையால், அமராவதி - ஹைதராபாத் இடையேயான பயண நேரம் வெறும் 70 நிமிடங்களாகக் குறைக்கப்படும். அமராவதி - சென்னை இடையேயான பயணமும் 112 நிமிடங்களாகக் குறைக்கப்படும்.

ஹைதராபாத் - புணே இடையே 1 மணி 55 நிமிடங்களும், புணே - மும்பை இடையே 48 நிமிடங்களும், ஹைதராபாத் - பெங்களூரு இடையே 2 மணி 8 நிமிடங்களாகவும், அமராவதி - ஹைதராபாத் இடையே 70 நிமிடங்களும், சென்னை - பெங்களூரு இடையேயான பயண நேரம் 73 நிமிடங்களாகவும் இருக்கும். சென்னை - பெங்களூரு இடையேயான திட்டம் விரைவில் தொடங்கப்படும்.

இந்த அதிவேக ரயில் சேவையானது, முக்கிய நகரங்களை இணைத்து, குறிப்பிடத்தக்க முக்கிய முன்னேற்றங்களைக் கொண்டுவரும்" என்று தெரிவித்தார்.

Summary

Railway Minister Ashwini Vaishnaw shares Bullet train plan for South India

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.