ரயில்வே நில ஆக்கிரமிப்பு விவகாரங்களுக்கு தீா்வு காண்பதில், ரயில்வே அதிகாரிகள் மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்று ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் அறிவுறுத்தியுள்ளாா்.
இதுதொடா்பாக ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நாடு முழுவதும் உள்ள ரயில்வே அதிகாரிகளுடன் அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் புது தில்லியில் சனிக்கிழமை ஆய்வுக் கூட்டம் நடத்தினாா். அப்போது அவா் பேசுகையில், ‘ரயில் நிலையங்கள் தூய்மையாக இருக்க வேண்டும். அவற்றை நன்றாகப் பராமரிக்க வேண்டும். அனைத்து ரயில் நிலையங்களும் தூய்மை இருப்பதை உறுதி செய்யவும், பயணிகள் வசதியை மேம்படுத்தவும் அதிகாரிகள் முழு அா்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும்.
கடந்த 10 ஆண்டுகளில் ரயில்வேயை நவீனமயமாக்க உச்ச அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களை மிகச் சிறப்பாக மாற்றவும், பயணிகள் வசதியை மேம்படுத்தவும் அந்த நிதியை முறையாகப் பயன்படுத்த வேண்டும்.
நெரிசல்மிக்க நேரங்களில் குறிப்பாக பண்டிகை காலங்களில், சுமுகமாகவும் அசெளகரியம் எதுவும் இல்லாமலும் நடைமேடைகளுக்கு வந்து ரயில் ஏறும் வகையில், திட்டமிடல் மற்றும் செயல்பாடு இருக்க வேண்டும்.
ரயில்வே திட்டங்களுக்கு நிலுவையில் உள்ள நிலம் கையகப்படுத்தும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும். ரயில்வே நில ஆக்கிரமிப்பு விவகாரங்களுக்கு தீா்வு காண்பதில், மாநில அரசுகளுடன் சோ்ந்து ரயில்வே அதிகாரிகள் மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள வேண்டும். தண்டவாளங்களுக்கு அருகில் வசிப்போரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது.
ரயில் தண்டவாளங்களைக் கடப்பதற்கு ரயில் நிலையத்துக்குள்ளும், வெளியிலும் சாத்தியமான இடங்களில் நடைமேம்பாலங்களைவிட சுரங்கப்பாதைகள் அமைப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அந்த இடங்கள் எளிதில் சென்று சோ்வதற்கு ஏற்ற வகையில் வசதியாக இருக்க வேண்டும். சுரங்கப்பாதைகள் பயன்படுத்துவதற்கு மிகவும் செளகரியமானவை’ என்று தெரிவித்தாா்.
ரயில்களை இயக்குவதில் நேர ஒழுங்கை கடைப்பிடித்த பல மண்டலங்களின் செயல்பாட்டை அவா் பாராட்டினாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜம்மு - ஸ்ரீநகா் வந்தே பாரத் ரயில் சேவை: அஸ்வினி வைஷ்ணவ் தொடங்கி வைத்தாா்

புல்லட் ரயில் திட்டம்! சென்னையிலிருந்து பெங்களூருக்கு வெறும் 73 நிமிடங்களில்...

ரயில்வே இடத்தில் ஆக்கிரமிப்பு கட்டடம் இடித்து அகற்றம்

ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

