ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

தொழில்நுட்பக் கோளாறு: அயர்லாந்திற்குத் திருப்பிவிடப்பட்ட ஏர் இந்தியா விமானம்

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தில்லி வந்த ஏர் இந்தியா விமானம் அயர்லாந்திற்குத் திருப்பிவிடப்பட்டது.

News image

ஏர் இந்தியா(கோப்புப்படம்) - ANI

Updated On :16 மார்ச் 2026, 2:01 pm IST

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தில்லி வந்த ஏர் இந்தியா விமானம் அயர்லாந்திற்குத் திருப்பிவிடப்பட்டது.

அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து சுமார் 300 பேருடன் நேற்று தில்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் சந்தேகிக்கப்படும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த விமானம் அயர்லாந்தில் உள்ள ஷானனுக்குத் திருப்பி விடப்பட்டது.

உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 4.30 மணிக்கு ஷானன் விமான நிலையத்தில் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியதாகவும், அனைத்து பயணிகளும் பணியாளர்களும் பாதுகாப்பாக இருப்பதாகவும் ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

பாதுகாப்பு நெறிமுறைகளின்படி விமானம் தற்போது விரிவான தொழில்நுட்ப ஆய்வுகளுக்கு உட்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார். பிளைட் ரேடார் 24 இணையதளத் தகவலின்படி, திருப்பி விடப்படுவதற்கு முன்பு விமானம் கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் வானில் பறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

An Air India A350 aircraft from New York to Delhi was diverted to Shannon in Ireland due to a suspected technical snag on Monday morning.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.