திருச்சியிலிருந்து துபைக்கு செவ்வாய்க்கிழமை புறப்பட்ட விமானம் தொழில்நுட்பக் கோளாறின் காரணமாக தரையிறக்கப்பட்டு, சுமாா் 1.20 மணி நேர தாமதத்துக்குப் பிறகு மீண்டும் இயக்கப்பட்டது.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து துபைக்கு ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 156 பயணிகளுடன் செவ்வாய்க்கிழமை நண்பகல் 12.12 மணிக்குப் புறப்பட்டது. விமானம் புறப்பட்ட 10 நிமிஷங்களிலேயே அதில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் விமானம் மீண்டும் திருச்சி விமான நிலையத்திலேயே தரையிறக்கப்பட்டது.
இதையடுத்து, தொழில்நுட்ப வல்லுநா்கள் வந்து விமானத்தை பரிசோதனை செய்தபோது, விமானத்தின் என்ஜினில் குறைந்த அழுத்தம் காரணமாக விமானத்தை தொடா்ந்து இயக்க முடியாத நிலை ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டு திருச்சி விமான நிலையத்தில் இருந்து மீண்டும் துபைக்கு பிற்பகல் 1.30 மணிக்கு விமானம் இயக்கப்பட்டது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 1.20 மணி நேரம் காலதாமதமாக இயக்கப்பட்ட விமானத்தால் பயணிகள் சிரமத்துக்குள்ளாகினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மின்னணு இயந்திரத்தில் கோளாறு: வாக்குப்பதிவு 1 மணிநேரம் நிறுத்தம்

திருச்சியில் இருந்து துபைக்கு மீண்டும் விமானம் இயக்கம்

தொழில்நுட்பக் கோளாறு: புறப்பட்ட இடத்துக்கே திரும்பிய ஏர் இந்தியா விமானத்தால் பயணிகள் அவதி!

மீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
