மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

நீதிமன்றம் முன் ஜாமீனை மறுக்கலாம்; குற்றவாளியை சரணடைய உத்தரவிட முடியாது: உச்சநீதிமன்றம்

‘ஒரு நீதிமன்றம் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு முன் ஜாமீனை அளிக்க மறுக்க முடியும். ஆனால், விசாரணை நீதிமன்றத்தின் முன் சரணடையுமாறு அவருக்கு உத்தரவிட நீதிமன்றத்துக்கு அதிகாரமில்லை’ என்று உச்சநீதிமன்றம் கூறியது.

News image

உச்சநீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :27 ஏப்ரல் 2026, 12:51 am IST

‘ஒரு நீதிமன்றம் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு முன் ஜாமீனை அளிக்க மறுக்க முடியும். ஆனால், விசாரணை நீதிமன்றத்தின் முன் சரணடையுமாறு அவருக்கு உத்தரவிட நீதிமன்றத்துக்கு அதிகாரமில்லை’ என்று உச்சநீதிமன்றம் கூறியது.

ஜாா்க்கண்ட் மாநிலத்தில் நில விவகாரத்தில் ஒருவா் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 323 (வேண்டுமென்றே திட்டமிட்டு காயம் ஏற்படுத்துதல்), பிரிவு 420 (மோசடி), 467 (பிணை ஆவணத்தை போலியாக உருவாக்கி ஏமாற்றுதல்), 468 (ஏமாற்றும் நோக்கில் மோசடி செய்தல்), 471 (மோசடி ஆவணங்களைப் பன்படுத்துதல்), 120பி உள்ளிட்டப் பிரிவுகளின் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து, குற்றச்சாட்டுக்கு உள்ளானவா் காவல் துறை நடவடிக்கையிலிருந்து தப்பிப்பதற்காக முன் ஜாமீன் கேட்டு ஜாா்க்கண்ட் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவைத் தள்ளுபடி செய்த உயா்நீதிமன்றம், மனுதாரா் உடனடியாக விசாரணை நீதிமன்றத்தில் சரணடைந்து, ஜாமீன் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தியது.

அதைத் தொடா்ந்து, முன் ஜாமீன் கோரி அவா் தரப்பில் இரண்டாவது மனு உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவையும் தள்ளுபடி செய்த உயா் நீதிமன்றம், முந்தைய உத்தரவையே பிறப்பித்தது. அதாவது, ‘சத்தேந்தா் குமாா் அந்தில் - சிபிஐ ஆகியோருக்கு இடையேயான வழக்கில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், மனுதாரா் விசாரணை நீதிமன்றத்தில் சரணடைந்து, ஜாமீன் பெற்றுக்கொள்ள வேண்டும்’ என்று மீண்டும் அறிவுறுத்தியது.

இதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் அவா் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜெ.பி. பாா்திவாலா, உஜ்ஜல் புயான் ஆகியோா் அடங்கிய அமா்வில் அண்மையில் விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘நீதிமன்றம் முன் ஜாமீன் கோரிக்கையை நிராகரிக்க விரும்பினால், அதுதொடா்பான மனுவைத் தள்ளுபடி செய்யலாம். ஆனால், மனுதாரா் விசாரணை நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்று உத்தரவிடுவதற்கு நீதிமன்றத்துக்கு அதிகாரமில்லை’ என்று தீா்ப்பளித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.