மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ராகுல் பேசுவதைக் கேட்பதே தலைவலியாக இருந்தது! கங்கனா ரணாவத்

மக்களவையில் ராகுல் காந்தி பேசியது குறித்து கங்கனா ரணாவத் விமர்சனம்...

News image

ராகுல் | கங்கனா ரணாவத் - sansad tv

Updated On :17 ஏப்ரல் 2026, 5:33 pm IST

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியதைக் கேட்பதே பெரும் தலைவலியாக இருந்ததாக பாஜக எம்.பி. கங்கனா ரணாவத் கூறியுள்ளார்.

தொகுதி மறுவரையறை மசோதா, யூனியன் பிரதேச தொகுதிகள் மறுவரையறை திருத்த மசோதா, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்கள் நேற்று(ஏப். 16) மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று மசோதாக்கள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், பாஜகவையும் பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார். அப்போது பிரதமர் மோடியை ஒரு மாயாஜாலக்காரர் என்று பேசியது பாஜகவினர் மத்தியில் எதிர்ப்பைக் கிளப்பியுள்ளது.

மக்களவையில் ராகுலின் உரை குறித்து செய்தியாளர்களுடன் பேசிய பாஜக எம்.பி. கங்கனா ரணாவத்,

"ராகுல் காந்தி பேசுவதைக் கேட்பதே பெரும் தலைவலியாக இருந்தது. அவர் தனது குழந்தைப் பருவத்தில் ஏற்பட்ட வருத்தங்களை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். அவர் தனது சிறு வயதில் ஏற்பட்ட மன அதிர்ச்சிகளால், மாயாஜாலங்களால் பாதிக்கப்பட்டிருக்கிறார். உண்மையில ராகுல்தான் ஒரு மாயாஜாலக்காரர். பேசுவதை நிறுத்துமாறு அவைத் தலைவர் கூறியும் ராகுல் நிறுத்தவில்லை. அது தொல்லையாக இருந்தது. நாடாளுமன்றத்தை கேலிக்கூத்தாக்கிவிட்டார் ராகுல்" என்று கூறினார்.

Summary

BJP MP Kangana Ranaut says It was such a headache to listen to Rahul gandhi speech

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.