இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரால் இந்தியாவில் எரிசக்தி நெருக்கடியை சமாளிக்க மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி இரண்டு நாள் பயணமாக இன்று கத்தார் செல்கிறார்.
அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் நாடுகளிடையே கடந்த பிப்ரவரி முதல் போர் நடைபெற்றுவந்த நிலையில் இரு வாரங்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவும், ஈரானும் இரு வார காலத்துக்கு போா் நிறுத்தம் செய்வதாக நேற்று(புதன்கிழமை) அறிவித்தன. இஸ்ரேலும் இந்தப் போா் நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து தாக்குதலை நிறுத்துவதாக அறிவித்தது.
இதையடுத்து, மேற்காசியாவில் சுமாா் ஒரு மாதத்துக்கும் மேலாக நிலவிய பதற்றம் தணிந்துள்ளது.
முன்னதாக இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரால் ஈரான் வசமுள்ள ஹோர்முஸ் நீரிணை வழியாக கச்சா எண்ணெய் போக்குவரத்துக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டது.
தற்போது போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டாலும் ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று ஈரான் கூறியுள்ளது.
இந்த சூழ்நிலையில்தான் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி இரண்டு நாள்(ஏப். 9 - 10) பயணமாக இன்று கத்தார் செல்கிறார்.
ஹோர்முஸ் நீரிணை தற்போது ஈரான் வசம் உள்ளதால் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு கச்சா எண்ணெய் பெறுவதில் சிக்கல் நீடிப்பதால் இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர் கத்தார் செல்வதாகக் கூறப்படுகிறது.
ஏனெனில் போர் நிறுத்தத்தால் இயற்கை எரிவாயு உற்பத்தியை கத்தார் மீண்டும் தொடங்கியுள்ளது. ஈரான் போரால் தாக்குதலுக்கு உள்ளான வளைகுடா நாடுகளில் கத்தாரும் ஒன்று.
அதேபோல மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஏப். 11, 12 தேதிகளில் ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார். போர் நிறுத்தத்தையடுத்து அமைச்சர் ஜெய்சங்கர், ஐக்கிய அரபு அமீரகம் செல்வதால் இதுவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
Union Minister for Petroleum and Natural Gas Hardeep Singh Puri to visit Qatar on 9-10 April.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சர்வதேச பயங்கரவாதத்தின் மையப்புள்ளி பாகிஸ்தான்: ராஜ்நாத் சிங்

எரிவாயு இறக்குமதி? கத்தார் சென்றார் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர்!

மேற்கு வங்கத்தை பாகிஸ்தான் குறிவைத்தால்... ராஜ்நாத் சிங் எச்சரிக்கை!

மீண்டும் ஊரடங்கு? மத்திய அமைச்சர் பதில்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

