மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அரசு முறைப் பயணமாக கத்தார் நாட்டுக்குச் சென்றுள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகளின் தாக்குதலுக்குப் பதிலடியாக, வளைகுடா நாடுகளில் உள்ள முக்கிய கட்டமைப்புகளைக் குறிவைத்து ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி வந்தன.
இதனைத் தொடர்ந்து, கத்தாரின் மிகப் பெரிய எரிவாயு வயலின் மீது ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி தகர்த்தன. மேலும், ஹோர்முஸ் நீரிணை முடக்கப்பட்டதால், சர்வதேச அளவில் எரிபொருள் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, ஈரான் மற்றும் அமெரிக்கா இடையில் போர்நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளதால், கத்தாரில் மீண்டும் இயற்கை எரிவாயு உற்பத்தி தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி 2 நாள் அரசு முறைப் பயணமாக கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவுக்கு வியாழக்கிழமை (ஏப். 9) அன்று சென்றடைந்தார். இதையடுத்து, கத்தாரின் முக்கிய அதிகாரிகளுடன் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டது குறித்து அவர் பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, கத்தாரிடம் இருந்து இந்தியா அதிகப்படியான இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்து வந்தது. ஆனால், கத்தார் அரசின் இயற்கை எரிவாயு வயலின் மீதான ஈரானின் தாக்குதல்களால், அவர்களின் சர்வதேச விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Union Minister of Petroleum and Natural Gas, Hardeep Singh Puri, has visited Qatar on an official visit.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சர்வதேச பயங்கரவாதத்தின் மையப்புள்ளி பாகிஸ்தான்: ராஜ்நாத் சிங்

எரிவாயு தட்டுப்பாடு? கத்தார் செல்கிறார் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி!

மேற்கு வங்கத்தை பாகிஸ்தான் குறிவைத்தால்... ராஜ்நாத் சிங் எச்சரிக்கை!

மீண்டும் ஊரடங்கு? மத்திய அமைச்சர் பதில்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


