இந்தியாவின் மிகவும் ஊழல் நிறைந்த முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
போகாஜன் தொகுதிக்கான கட்சி வேட்பாளர் ரட்டன் எங்திக்கு ஆதரவாக நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் ராகுல் காந்தி கலந்துகொண்டு பேசினார்.
பிரபல பாடகர் ஜூபின் அஸ்ஸாம் மக்களுக்காக நின்றார் ஆனால் அவரது மரணத்திற்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்த 100 நாள்களுக்குள் அவரது மரணம் தொடர்பான விவகாரத்தில் அவருக்கு நீதி வழங்கும்.
இந்தியாவில் மிகவும் ஊழல் மிகுந்த முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா என்றும் அவரது குடும்பமும் ஊழலில் முதலிடத்தில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். காங்கிரஸ் அரசு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்.
தற்போது அவர் தன்னைப்பற்றிப் பெருமையாகப் பேசிக்கொண்டிருந்தாலும், அதன் பிறகு அவர் முற்றிலும் அமைதியாகிவிடுவார். மூன்று பெரிய கார்ப்போரேட் நிறுவனங்களுக்கு அஸ்ஸாமில் மொத்தம் 94,400 பிகாஸ் நிலம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார். இந்த நிலங்கள் மக்களிடமிருந்து பறிக்கப்பட்டவை.
நரேந்திர மோடி, அமித் ஷா, ஹிமந்த பிஸ்வ சர்மா ஆகியோர் அஸ்ஸாமில் நில ஏடிஎம்-ஐ உருவாக்கியுள்ளனர். அவர்கள் மக்களிடமிருந்து நிலத்தைப் பறித்து, அதைப் பெரிய தொழிலதிபர்களுக்கு வழங்குகிறார்கள்.
கடந்த ஆண்டு செப்டம்பரில் சிங்கப்பூரில் நீரில் மூழ்கி உயிரிழந்த புகழ்பெற்ற இசைக் கலைஞர் கார்க் குறித்துப் பேசிய ராகுல், அவர் மாநிலத்திற்காகவும், மக்களுக்காகவும் உறுதியாக நின்றார். அவர் தனி நபருக்காகவோ, குறிப்பிட்ட சமூகத்திற்காகவோ, மொழிக்காகவோ அல்லது குறிப்பிட்ட வரலாற்றிற்காகவோ மட்டும் நிற்கவில்லை. அவர் அஸ்ஸாமின் பன்முக கலாசார மற்றும் பல மத மரபுகளின் உணர்வைப் பிரதிபலித்தார்.
காங்கிரஸ் கட்சி அதிகாரப் பரவலாக்கத்தில் நம்பிக்கை கொண்டுள்ளது. அதேவேளையில் பாஜக அஸ்ஸாம் மாநிலத்தைத் தில்லியிலிருந்து ஆட்சி செய்ய முயச்சிக்கிறது. அரசியலமைப்பின் 244(ஏ) பிரிவை முழுமையாகச் செயல்படுத்த நாங்கள் உறுதியளிக்கிறோம்.
கார்பி ஆங்லாங் மற்றும் ஆறாவது அட்டவணையின் கீழ் வரும் அனைத்துப் பகுதிகளும், குவாஹாட்டி அல்லது தில்லியால் அல்லாமல், அப்பகுதி மக்களால் மட்டுமே நிர்வகிக்கப்படும் என அவர் கூறினார்.
இந்தியா - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்துப் பேசிய ராகுல், அமெரிக்கப் பொருள்களுக்கான வரிகள் குறைக்கப்பட்டு, இந்தியச் சந்தை அவர்களுக்குத் திறந்துவிடப்பட்டுள்ளதால், இந்த ஒப்பந்தம் புதுதில்லிக்குப் பெரும் இழப்பாகவே அமையும்.
எப்ஸ்டீன் ஆவணங்கள் காரணமாக, டொனால்ட் டிரம்ப் நரேந்திர மோடியைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். டிரம்ப், அமெரிக்காவில் அதானிக்கு எதிராகக் குற்றவியல் வழக்குகளைத் தொடர்ந்தார் என அவர் தெரிவித்தார். இவ்வாறு அவர் பேசினார்.
Summary
Congress leader Rahul Gandhi has criticized Himanta Biswa Sarma, calling him India's most corrupt Chief Minister.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா ராஜிநாமா!

தொடர்ந்து 6-வது முறை.. ஜலுக்பரியில் ஹிமந்த அமோக வெற்றி!

ஜலுக்பரி தொகுதியில் அஸ்ஸாம் முதல்வர் தொடர்ந்து முன்னிலை!

ஜனநாயகக் கடமையாற்றினார் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

