மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க மாட்டேன்: ஆண்ட்ரியா

செல்வராகவன் குறித்து ஆண்ட்ரியா...

News image

ஆண்ட்ரியா - x

Updated On :1 ஏப்ரல் 2026, 12:20 pm IST

நடிகை ஆண்ட்ரியா இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க மாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.

நடிகை ஆண்ட்ரியா நடிப்புடன் இசைக் கச்சேரிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். இறுதியாக, இவர் நடிப்பில் வெளியான மாஸ்க் கவனம் பெற்றது. பிசாசு - 2 திரைப்படம் வெளியீட்டிற்குக் காத்திருக்கிறது.

கோபி நயினாரின் மனுசி படத்தில் நடித்து முடித்துள்ளார். சென்சார் பிரச்னைகளால் திரைக்கு வராமல் இருக்கிறது. தற்போது, வெற்றி மாறனின் அரசன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், நிகழ்வொன்றில் கலந்துகொண்ட ஆண்ட்ரியாவிடம், “ஆயிரத்தில் ஒருவன் - 2 திரைப்படம் வருமா?” எனக் கேட்கப்பட்டது.

அதற்கு ஆண்ட்ரியா, “அப்படம் வருமா என என்னிடம் எதிர்பார்க்காதீர்கள். அந்தப் படம் உருவாகட்டும். ஆனால், நான் அதில் நடிக்க மாட்டேன். காரணம், செல்வராகவனுடன் பணியாற்றுவது மிகவும் கடினம். ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்திற்காக 200 நாள்கள் படப்பிடிப்பு நடத்தினார். ஆனால், அப்படத்திற்கு பின் வந்த படங்களும் கதாபாத்திரங்களும் எனக்கு சுலபமாகவே இருந்தது.” எனக் கூறினார்.

செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் முதல் பாகத்தில் ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுகளைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

actor andrea spokes about aayirathil oruvan 2 and selvaraghavan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.