மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கைவிடப்பட்ட பிரசாந்த் - ஹரி திரைப்படம்?

பிரசாந்த் - ஹரி திரைப்படம் குறித்து...

News image

பிரசாந்த் - ஹரி - x

Updated On :13 ஏப்ரல் 2026, 12:27 pm IST

இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர் பிரசாந்த் நடிக்க இருந்த திரைப்படம் கைவிடப்பட்டதாம்.

நடிகர் பிரசாந்த் நடிப்பில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அந்தகன், தி கோட் ஆகிய படங்களில் நடித்திருந்தார். அந்தகன் திரைப்படம் ஹிந்தியில் வெளியான ‘அந்தாதுன்’ திரைப்படத்தின் ரீமேக் என்றாலும் தமிழில் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.

தற்போது, தெலுங்கில் வெற்றிபெற்ற கோர்ட் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து முடித்துள்ளார். படத்திற்கு ரஞ்சன் எனப் பெயரிட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, இயக்குநர் ஹரியுடன் பிரசாந்த் இணையும் படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், இப்படத்திற்காக ஹரிக்கு கொடுத்த முன்பணத்தைப் பெற்றுத் தருமாறு தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இயக்குநரும் பிரசாந்த்டின் தந்தையுமான தியாகராஜன் புகார் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதனால், இக்கூட்டணி திரைப்படம் கைவிடப்பட்டதாகவே தெரிகிறது. இயக்குநர் ஹரியின் முதல் படமான ‘தமிழ்’ திரைப்படத்தில் பிரசாந்த் கதாநாயகனாக நடித்திருந்தார். கிட்டத்தட்ட 23 ஆண்டுகளுக்குப் பின் இவர்கள் மீண்டும் இணைய இருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

reports suggests that director hari and prashanth movie has dropped

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.