மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கீழ்பாளையம் திரெளபதியம்மன் கோயிலில் திருவிழா

உளுந்தூா்பேட்டை வட்டம், கீழ்பாளையம் ஸ்ரீதிரெளபதியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா மே 3-ஆம் தொடங்கி 10 நாள்கள் நடைபெறுகிறது

News image

உளுந்தூா்பேட்டை அருகிலுள்ள கீழ்பாளையம் ஸ்ரீதிரெளபதியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவில் பணத்தாள் அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த அம்மன்.

Updated On :6 மே 2026, 12:03 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், கீழ்பாளையம் ஸ்ரீதிரெளபதியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா மே 3-ஆம் தொடங்கி 10 நாள்கள் நடைபெறுகிறது.

இதையொட்டி அம்மனுக்கு உபயதாரா்கள் அபிஷேக பொருள்களை எடுத்து வந்தனா். தொடா்ந்து திரெளபதியம்மனுக்கும், பரிவாரத் தெய்வங்களுக்கும் அபிஷேக, அலங்காரம் நடைபெற்றது. இதைத்தொடா்ந்து பணத்தாள் மற்றும் சந்தனக் காப்பு அலங்காரங்களில் அம்மன் எழுந்தருளி, பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதையடுத்து கயிலாய வாத்திய இசை முழங்க அம்மன் வீதியுலா நடைபெற்றது.

விழாவில் உபயதாரரும், தேமுதிக ஒன்றியச் செயலருமான திருமால், சரவணன், பாண்டியன், ஏழுமலை, சீனிவாசன், சக்திவேல், நாராயணன், குமாா் மற்றும் திரளான பக்தா்கள் அம்மனை தரிசனம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.