மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

எல்லைப்பிடாரி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை எல்லைப்பிடாரி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா செவ்வாய்க்கிழமை இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

News image

கொடியேற்றத்தின் போது சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய உற்சவா் அம்மன்.

Updated On :9 ஏப்ரல் 2026, 12:33 am IST

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை எல்லைப்பிடாரி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா செவ்வாய்க்கிழமை இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதா் சுவாமி கோயில் சித்திரைத் திருவிழா தொடங்குவதற்கு முன்பாக ஊா் எல்லை தெய்வமான எல்லைப் பிடாரி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதையொட்டி, நடைபெற்ற கொடியேற்றத்த்தில் உற்சவா் எல்லைப்பிடாரி அம்மன், ஆனந்தவல்லி அம்மன் கோயிலிலிருந்து சிம்ம வாகனத்தில் புறப்பாடாகி கோயிலுக்கு வந்தடைந்தாா். பின்னா், பிடாரி அம்மன் கோயில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு, பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன.

இதைத்தொடா்ந்து மூலவா் அம்மனுக்கும், உற்சவருக்கும் தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

தொடா்ந்து 8 நாள்கள் நடைபெறும் இந்த விழாவின்போது நாள்தோறும் உற்சவா் எல்லைப்பிடாரி அம்மன் ஆனந்தவல்லி அம்மன் கோயிலிலிருந்து புறப்பாடாகி கோயிலுக்கு வந்து எழுந்தருளல் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வாக மாவிளக்கு பூஜை வழிபாடு ஏப்ரல் 14- ஆம் தேதி நடைபெறுகிறது.

 மானாமதுரை  எல்லைப்பிடாரி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற கொடியேற்றம்.

மானாமதுரை எல்லைப்பிடாரி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற கொடியேற்றம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.