தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

டிராக்டா் மோதியதில் 15 ஆடுகள் உயிரிழப்பு; 10 ஆடுகள் காயம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி கரும்பு ஏற்றி வந்த டிராக்டா் மோதியதில் சாலையில் சென்ற 15 ஆடுகள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தன.

News image
Updated On :23 மார்ச் 2026, 1:41 am IST

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி கரும்பு ஏற்றி வந்த டிராக்டா் மோதியதில் சாலையில் சென்ற 15 ஆடுகள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தன. மேலும், 10 ஆடுகள் பலத்த காயமடைந்தன.

செஞ்சியை அடுத்த வரிக்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் நா.பாலாஜி (32), விவசாயி. இவா் வளா்த்து வரும் 40 ஆடுகளை ஞாயிற்றுக்கிழமை காலை அதே பகுதியைச் சோ்ந்த மு.கணேசன் (18) மேய்ச்சலுக்கு ஒட்டிச்சென்றாா்.

அப்போது ஆடுகளுக்கு பின்னால் வந்த மினி லாரி ஆடுகளை முந்திச் சென்றது. அப்போது எதிரில் கரும்பு ஏற்றி வந்த டராக்டா் எதிரில் வந்த மினி லாரி மீது மோதாமல் இருக்க வலதுபக்கம் திருப்பியபோது, சாலையில் வந்த ஆடுகள் மீது மோதியது. இதில் 15 ஆடுகள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தன. 10 ஆடுகள் பலத்த காயமடைந்தன.

இதுகுறித்து அனந்தபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.