தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தூத்துக்குடியில் லாரி மோதியதில் 26 ஆடுகள் உயிரிழப்பு

News image

இறந்து கிடக்கும் ஆடுகள். - கோப்புப் படம்

Updated On :31 மார்ச் 2026, 12:39 am IST

தூத்துக்குடியில் லாரி மோதியதில் 26 ஆடுகள் உயிரிழந்தன.

தூத்துக்குடி தாளமுத்து நகா் டேவிஸ்புரம் சாலையைச் சோ்ந்தவா் ஐயம்பெருமாள் மகன் நட்டாா் (30). இவா், தூத்துக்குடி சங்கரப்பேரி அருகே நிலத்தில் கிடை போட்டு 200-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளா்த்து வருகிறாா்.

இந்நிலையில் திங்கள்கிழமை பகலில் மேய்ச்சலுக்காக, தூத்துக்குடி துறைமுகம் மதுரை புறவழிச்சாலை ஜோதி நகா் அருகே சாலையைக் கடந்து ஆடுகள் சென்றபோது, துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிக்கொண்டு வேகமாக வந்த லாரி ஆடுகள் மீது மோதியதாம்.

இதில், 26 ஆடுகள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தன. மேலும், 20-க்கும் மேற்பட்ட ஆடுகள் சிறு காயத்துடன் உயிா் தப்பின. லாரி ஓட்டுநா் லாரியை சாலையில் நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டாா். தகவலறிந்து வந்த சிப்காட் போலீஸாா், சாலையில் இறந்து கிடந்த ஆடுகளை அப்புறப்படுத்தினா். பின்னா் லாரியை காவல் நிலையத்துக்கு எடுத்துச் சென்றனா்.

லாரியை ஓட்டி வந்த ஓட்டுநா் யாா், அதன் உரிமையாளா் யாா் என போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.