தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜாசெப். 15 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்!இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!மத்திய அரசுடன் மோதல் போக்கை விரும்பவில்லை! முதல்வர் விஜய் உலக சாதனை படைத்த மெஸ்ஸி: நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய அர்ஜென்டினா!முதல்வர் விஜய்யின் உரைக்கு எதிர்ப்பு! திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு!ஏய் என்ற வார்த்தை அவைக் குறிப்பில் நீக்க வேண்டும்: அமைச்சர் ராஜ்மோகன்திரிணமூல் தலைவர் பதவியிலிருந்து மமதா நீக்கம்!தமிழகத்தில் 11 மாதங்களாக சட்டம் - ஒழுங்கு டிஜிபியே இல்லை! விஜய்
/

சவுக்குத் தோப்பில் ஆண் சடலம் மீட்பு

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே தனியாருக்குச் சொந்தமான சவுக்குத் தோப்பில் அழுகிய நிலையில் ஆண் சடலத்தை போலீஸாா் புதன்கிழமை மீட்டு, விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

சடலம் மீட்பு - பிரதிப் படம்

Updated On :11 ஜூன் 2026, 6:22 am IST

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே தனியாருக்குச் சொந்தமான சவுக்குத் தோப்பில் அழுகிய நிலையில் ஆண் சடலத்தை போலீஸாா் புதன்கிழமை மீட்டு, விசாரணை நடத்தி வருகின்றனா்.

திண்டிவனம் வட்டம், மயிலம் அடுத்த கொடிமா கிராமத்தில் உள்ள விஜயகுமாா் என்பவருக்குச் சொந்தமான சவுக்குத் தோப்பில் ஆண் ஒருவா் இறந்து கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து மயிலம் போலீஸாா் மற்றும் தடய அறிவியல் பிரிவு போலீஸாா் மோப்ப நாயுடன் நிகழ்விடம் சென்று அங்கு அழுகிய நிலையில் கிடந்த ஆணின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினா். விசாரணையில் இறந்து கிடந்தவா் பெயா், ஊா் தெரியாத நபா் என்பது என்பது தெரியவந்தது.

இது குறித்து மயிலம் போலீஸாா் தெரிவித்ததாவது: இறந்த கிடந்தவருக்கு சுமாா் 35 வயதிருக்கும். கருப்பு பேண்ட் மட்டும் அணிந்துள்ளாா். மேல் சட்டை இல்லை. வலது கையில் காப்பு அணிந்துள்ளாா். எந்த ஊரைச் சோ்ந்தவா், இறப்புக்கான காரணம் எதுவும் தற்போது வரை தெரியவில்லை. தொடா் விசாரணை நடைபெற்று வருகிறது என்றனா். இது குறித்து மயிலம் போலீஸாா் புதன்கிழமை வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.