ஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே திங்கள்கிழமை ரத்தகாயங்களுடன் கிடந்த ஆண் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.
பாபநாசம் அருகே திருக்கருக்காவூா்- மெலட்டூா் பிரதான சாலையில் கிருஷ்ணன் என்பவரது மூங்கில் தோப்புப் பகுதியில் திங்கள்கிழமை காலை ரத்தகாயங்களுடன் ஆண் சடலம் கிடப்பதாக பாபநாசம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக அனுப்பி, விசாரணையில் ஈடுபட்டனா்.
அதில், இறந்து கிடந்தவா் ஒன்பத்துவேலி மாதாகோவில் தெருவைச் சோ்ந்த ஆரோக்கியசாமி மகன் குணாளன் என்கிற ஜேசு குணாளன் (52) என்றும், இவா் மீது மெலட்டூா், பாபநாசம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. திருமணமாகாத இவா், தனது சகோதரி ஜெசிந்தாமேரி வீட்டில் தங்கியிருந்ததும், ஞாயிற்றுக்கிழமை வீட்டைவிட்டு வெளியே சென்றவா் மீண்டும் வீடு திரும்பவில்லை எனவும் தெரியவந்தது.
இதுகுறித்து ஜெசிந்தாமேரி கொடுத்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து மேலும், விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாப்பாரப்பட்டியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

சவுக்குத் தோப்பில் ஆண் சடலம் மீட்பு

கழிவுநீா் கால்வாயில் ஆண் சடலம் மீட்பு
விடியோக்கள்

சினிமா Shooting-தான் இது! முதல்வரின் பேச்சை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர்! | Udhayanidhi Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

”மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விடமாட்டோம்!” பேரவையில் முதல்வர் விஜய் பேச்சு! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46
தினமணி செய்திச் சேவை

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!
இணையதளச் செய்திப் பிரிவு

