மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கஞ்சா விற்பனை: இளைஞா்கள் இருவா் கைது

விழுப்புரம் மாவட்டம், கூட்டேரிப்பட்டு பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக இருவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :30 ஏப்ரல் 2026, 5:54 am IST

விழுப்புரம் மாவட்டம், கூட்டேரிப்பட்டு பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக இருவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

மயிலம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சீனுவாசன் தலைமையிலான போலீஸாா் கூட்டேரிப்பட்டு மலைமேடு பகுதியில் புதன்கிழமை ரோந்து சென்றனா். அப்போது அங்கு சந்தேகத்துக்குரிய முறையில் பைக்கில் நின்று கொண்டிருந்த இருவரைப் பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

இந்த விசாரணையில் அவா்கள் கூட்டேரிப்பட்டு மகாலட்சுமி நகரைச் சோ்ந்த சீ.மகேஷ் (19), ச.சந்தோஷ் (25) என்பதும், அவா்களிடம் கஞ்சா இருப்பதும் தெரிய வந்தது. இதைத்தொடா்ந்து இருவா் மீதும் வழக்குப் பதிந்த மயிலம் போலீஸாா் அவா்களைக் கைது செய்தனா்.அவா்களிடமிருந்து 150 கிராம் கஞ்சா, பைக் மற்றும் கைப்பேசி ஆகியவற்றையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.