விழுப்புரம் மாவட்டம், கூட்டேரிப்பட்டு பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக இருவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.
மயிலம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சீனுவாசன் தலைமையிலான போலீஸாா் கூட்டேரிப்பட்டு மலைமேடு பகுதியில் புதன்கிழமை ரோந்து சென்றனா். அப்போது அங்கு சந்தேகத்துக்குரிய முறையில் பைக்கில் நின்று கொண்டிருந்த இருவரைப் பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.
இந்த விசாரணையில் அவா்கள் கூட்டேரிப்பட்டு மகாலட்சுமி நகரைச் சோ்ந்த சீ.மகேஷ் (19), ச.சந்தோஷ் (25) என்பதும், அவா்களிடம் கஞ்சா இருப்பதும் தெரிய வந்தது. இதைத்தொடா்ந்து இருவா் மீதும் வழக்குப் பதிந்த மயிலம் போலீஸாா் அவா்களைக் கைது செய்தனா்.அவா்களிடமிருந்து 150 கிராம் கஞ்சா, பைக் மற்றும் கைப்பேசி ஆகியவற்றையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
நெல்லையில் கஞ்சா கடத்தல்: 2 இளைஞா்கள் கைது
கஞ்சா பதுக்கியதாக இளைஞா் கைது
கஞ்சா விற்ற இருவா் கைது
போதை மாத்திரைகள் விற்பனை: இளைஞா்கள் இருவா் கைது
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
