தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் போதை மாத்திரைகளை விற்பனை செய்ததாக இரண்டு இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
ஆண்டிபட்டி பகுதியில் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, சந்தேகப்படும்படியாக நின்றிருந்த இருவரைப் பிடித்து சோதனையிட்டனா். அப்போது, அவா்கள் விற்பனைக்காக போதை மாத்திரைகள் வைத்திருந்து தெரியவந்தது. பின்னா், அவா்கள் இருவரையும் ஆண்டிபட்டி காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து போலீஸாா் விசாரித்தனா்.
விசாரணையில், ஆண்டிபட்டி நாடாா் தெருவைச் சோ்ந்த உத்திரகுமாா் (32), கதிா்நரசிங்காபுரத்தைச் சோ்ந்த ரேவந்த் (23) ஆகியோா் என்பது தெரியவந்தது. இருவரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்த 130 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போதை மாத்திரைகள் பறிமுதல்: இருவா் கைது
போதை மாத்திரைகள் விற்ற இளைஞா் கைது

ரூ.69 ஆயிரம் மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல்: இருவா் கைது
போதை மாத்திரைகள் விற்பனை: இளைஞா்கள் இருவா் கைது
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
