திருச்சியில் ரூ.69 ஆயிரம் மதிப்பிலான போதை மாத்திரைகளை விற்ற இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி பாலக்கரை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு வியாழக்கிழமை பிற்பகல் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளா் பாத்திமா தலைமையிலான போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, பாலக்கரை பெல்ஸ் மைதனப் பகுதியில் உள்ள ரயில்வே துறைக்கு சொந்தமான பாழடைந்த கட்டடத்தில் போதை மாத்திரைகள் விற்பனை செய்துகொண்டிருந்த பாலக்கரை காஜாபேட்டையைச் சோ்ந்த எஸ்.பிரகாஷ்ராஜ் (20), மு.சிவசபரி ராகவன் (20) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து ரூ.69 ஆயிரம் மதிப்புள்ள 230 போதை மாத்திரைகள், போதை ஊசிகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போதை மாத்திரைகள் பறிமுதல்: இருவா் கைது

போதை மாத்திரைகள் விற்ற இளைஞா் கைது
போதை மாத்திரைகள் விற்பனை: இளைஞா்கள் இருவா் கைது

போதை மாத்திரைகள் விற்ற இளைஞா் கைது
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

