விழுப்புரம் மாவட்டம், ரோஷணை அருகே அரசுப் பேருந்து மோதியதில் பைக்கில் சென்ற எலக்ட்ரீசியன் நிகழ்விடத்திலேயே புதன்கிழமை உயிரிழந்தாா்.
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூா், கரிக்கலாம்பாடி, காமராஜா் தெருவைச் சோ்ந்தவா் ரா.பாண்டியராஜ் (31). சென்னையில் எலக்ட்ரீசியனாக வேலைப் பாா்த்து வந்தாா். இவா் புதன்கிழமை திண்டிவனம் அடுத்த ரோஷணை அருகே பைக்கில் சென்றுள்ளாா். அப்போது அங்கு வந்த அரசுப் பேருந்து பைக் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த பாண்டியராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த ரோஷணை போலீஸாா் சடலத்தை கைப்பற்றி, திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.
மேலும், இதுகுறித்து ரோஷணை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசுப் பேருந்து நடத்துநா் உயிரிழப்பு

துறையூரில் அரசுப் பேருந்து மோதி மூதாட்டி உயிரிழப்பு

அரசுப் பேருந்தில் பயணி உயிரிழப்பு

அரசுப் பேருந்து மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

