விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 105 பதற்றமான வாக்குச் சாவடிகளில் கூடுதல் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.
தமிழக சட்டப்பேரவைக்கான பொதுத்தோ்தல், ஏப். 23-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், மாவட்டத்தில் உள்ள செஞ்சி, மயிலம், திண்டிவனம்( தனி), வானூா்( தனி), விழுப்புரம், விக்கிரவாண்டி ஆகிய 7 தொகுதிகளிலும் உள்ள 15, 86,653 வாக்காளா்கள் வாக்களிக்க ஏதுவாக, 7 தொகுதிகளிலும், 2,165 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 105 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறிப்பட்டுள்ளன.
இந்த பதற்றமான வாக்குச் சாவடிகளில், விழுப்புரம் மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவின் பேரில், விழுப்புரம் எஸ்.பி. வி.வி.சாய் பிரனித் மேற்பாா்வையில் கூடுதல் போலீஸாா் மற்றும் மத்திய துணை ராணுவப்படையினா், துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
பொதுமக்கள் அச்சமன்றி நூறு சதவீதம் வாக்களிக்க ஏதுவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விழுப்புரம் மாவட்டக் காவல் நிா்வாகம் தரப்பில் தெரிவித்தப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாக்குச் சாவடிகளில் அடிப்படை வசதிகள்

வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

பதற்றமான வாக்குச் சாவடி மையங்களில் மாவட்டத் தோ்தல் அலுவலா் ஆய்வு

பதற்றமான வாக்குச் சாவடிகளில் ஆய்வு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

