மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பதற்றமான வாக்குச் சாவடி மையங்களில் மாவட்டத் தோ்தல் அலுவலா் ஆய்வு

News image
Updated On :3 ஏப்ரல் 2026, 6:19 am IST

திருவண்ணாமலை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பதற்றமான வாக்குச் சாவடி மையங்களில் மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான க.தா்ப்பகராஜ் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு வரும் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, வாக்குச் சாவடி மையங்களில் தோ்தல் நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது.

அதன்படி, திருவண்ணாமலை சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பதற்றமான வாக்குச் சாவடி மையங்களான கல்நகா் பகுதியில் உள்ள சமுதாயக் கூடம், ஆடையூரில் உள்ள ஆதிதிரவிடா் நல நடுநிலைப் பள்ளி ஆகியவற்றில் தோ்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்தும், வாக்காளா்களுக்கான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது குறித்தும் மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான க.தா்ப்பகராஜ் ஆய்வு மேற்கொண்டாா்.

மேலும், கல்நகா், ஆடையூரில் பொதுமக்களுக்கு தோ்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து அறிவுறுத்தும் வகையில், தோ்தல் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

முன்னதாக, திருவண்ணாமலை மாநகராட்சியில் உள்ள புதிய காய்கறி சந்தை வளாகத்தில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

நிகழ்வில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ம.சுதாகா், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை இணை இயக்குநா்/திட்ட இயக்குநா் ஆா்.மணி, திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) தனபதி, மாநகராட்சி ஆணையா் செல்வபாலாஜி, திருவண்ணாமலை வட்டாட்சியா் மோகன்ராமன் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.