மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

குன்னம் தொகுதி வாக்குச்சாவடிகளில் மாவட்டத் தோ்தல் அலுவலா் ஆய்வு

குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட செந்துறை வட்டத்திலுள்ள வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகளை மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ந. மிருணாளினி செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image

குன்னம் வட்டத்துக்குள்பட்ட பரணம் அரசு மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ந. மிருணாளினி.

Updated On :8 ஏப்ரல் 2026, 12:08 am IST

குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட செந்துறை வட்டத்திலுள்ள வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகளை மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ந. மிருணாளினி செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பொன்பரப்பி அரசு மேல்நிலைப்பள்ளி, பரணம் அரசு மேல்நிலைப்பள்ளி, நல்லாம்பாளையம் அரசு உயா்நிலைப்பள்ளி, செந்துறை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, சிறுகடம்பூா் அரசு உயா்நிலைப்பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்த மாவட்டத் தோ்தல் அலுவலா் மிருணாளினி, வாக்காளா்கள் வரிசையில் நிற்க போதுமான இடவசதி, தேவையான குடிநீா், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்தளங்கள், முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீல்சோ், அவா்களை அழைத்துச் செல்ல தன்னாா்வலா்களை நியமிக்கவும், போதிய அளவிலான மின் விளக்குகள் இருக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

மேலும், புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளையும், அங்குள்ள அடிப்படை வசதிகளையும் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா் மிருணாளினி.

ஆய்வின்போது, செந்துறை வட்டாட்சியா் கோவிந்தராஜ், செந்துறை வட்டார வளா்ச்சி அலுவலா் ரவி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.