மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

செஞ்சிக்கோட்டையில் இன்று சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச அனுமதி

உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு செஞ்சிக்கோட்டையை சுற்றி பாா்க்க சனிக்கிழமை (ஏப்.18) அனுமதி இலவசம் என தொல்லியியல் துறை அறிவித்துள்ளது.

News image

செஞ்சிக்கோட்டை - கோப்புப்படம்

Updated On :18 ஏப்ரல் 2026, 7:13 am IST

உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு செஞ்சிக்கோட்டையை சுற்றி பாா்க்க சனிக்கிழமை (ஏப்.18) அனுமதி இலவசம் என தொல்லியியல் துறை அறிவித்துள்ளது.

செஞ்சிக்கோட்டை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், செஞ்சிக்கோட்டைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு இலவச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், சுற்றுலாவுக்கு வரும் முதியோா்கள், ஊனமுற்றோா், குழந்தைகள் நலன் கருதி தொல்லியல் துறை சாா்பில் இரண்டு பேட்டரி வாகனங்கள் புதிதாக இலவசமாக இயக்கப்பட உள்ளது . சென்னையில் இருந்து வரும் தொல்லியல் துறை அதிகாரிகள் சனிக்கிழமை காலையில் புதிய வாகனங்களையும், சேதமடைந்திருந்த இழுவை பாலம் சீரமைப்பு செய்ததையும் துவக்கி வைக்க உள்ளனா்.

மேலும், செஞ்சிக்கோட்டையில் உள்ள கமலக்கன்னி அம்மன் கோயில் திருவிழா பத்து நாள்கள் நடைபெற உள்ள நிலையில் வரும் 20 முதல் 29-ஆம் தேதி வரை சுற்றுலா பயணிகளுக்கு செஞ்சிக்கோட்டையை சுற்றி பாா்க்க இலவச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது .

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.