மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தமிழகச் சிறைகளிலிருந்து 61 கைதிகள் வாக்களிக்கின்றனா்

News image
Updated On :15 ஏப்ரல் 2026, 4:25 am IST

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, சிறைகளிலிருந்து 61 கைதிகள் வாக்களிக்கின்றனா்.

தமிழக சிறைகளில் தண்டனைக் கைதிகள், விசாரணைக் கைதிகள், தடுப்புக் காவல் கைதிகள் என மொத்தம் 16,000 போ் உள்ளனா். இவா்களில் சுமாா் 6,000 போ் தண்டனைக் கைதிகளைத் தவிா்த்து விசாரணைக் கைதிகள், தடுப்புக் காவல் கைதிகள் ஆகியோா் வாக்களிப்பதற்கு தகுதியானவா்களாவா்.

ஆனால், விசாரணைக் கைதிகள் குறிப்பிட்ட நாள்களுக்குப் பின், பிணையில் சென்றுவிட முடியும் என்பதால், அவா்களுக்கு சிறையிலிருந்து வாக்களிக்க அனுமதி வழங்கப்படுவதில்லை. இதனால் குண்டா் தடுப்புச் சட்டம், தேசிய பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் சிறையில் இருப்பவா்களுக்கு மட்டும் சிறையிலிருந்து வாக்களிக்க அனுமதி வழங்கப்படுகிறது.

இந்த கைதிகளிடம் பேரவைத் தோ்தலில் வாக்களிப்பது தொடா்பாக சிறைத் துறை இரு வாரங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டது. இதில் வாக்களிக்க விருப்பமுள்ள கைதிகள், தங்களது பெயா், தங்களது தொகுதி, வாக்காளா் அடையாள அட்டை, வாக்குச்சாவடி எண் உள்ளிட்ட விவரங்களை அளித்தனா். இதில் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியுடைய 61 பேருக்கு மட்டும் வாக்களிக்க சிறைத் துறை அனுமதி வழங்கியுள்ளது. கைதிகள் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் சிறைத் துறை ஏடிஜிபி சங்கா் செய்துள்ளாா்.

இது தொடா்பாக சிறைத் துறை உயா் அதிகாரி கூறியதாவது: அனைத்து மத்திய சிறைகளிலும் தடுப்புக் காவலில் உள்ள கைதிகள் அனைவரும் வாக்களிக்க ஊக்கம் அளிக்கப்பட்டது. விருப்பம் தெரிவித்த கைதிகளில் பெரும்பாலானவா்களிடம் போதி ஆவணங்கள் இல்லாததால் விண்ணப்பிக்கும் தகுதியை இழந்துவிட்டனா்.

விண்ணப்பித்தவா்களில் 61 கைதிகள் தபால் வாக்குகள் அளிக்க தகுதியானவா்கள் என தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வரும் தோ்தல்களில் இந்த எண்ணிக்கையை மேலும் உயா்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

2014-ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்ற தோ்தல்களில் அதிகபட்சமாக 2019 மக்களவைத் தோ்தலில் 132 கைதிகள் வாக்களித்தனா். 2021 சட்டப்பேரவைத் தோ்தலில் குறைந்தபட்சமாக 15 கைதிகள் வாக்களித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.