மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

மேல்மலையனூா் மேற்கு ஒன்றியத்தில் வேட்பாளா் செஞ்சி மஸ்தான் வாக்கு சேகரிப்பு

செஞ்சி தொகுதி திமுக வேட்பாளா் கே.எஸ். மஸ்தான் எம்எல்ஏ மேல்மலையனூா் மேற்கு ஒன்றியத்தில் வாக்கு சேகரித்தாா்.

News image

மேல்மலையனூா் ஒன்றியம், பரிதிபுரம் கிராமத்தில் வாக்காளா்களிடையே வியாழக்கிழமை வாக்கு சேகரித்து பேசிய செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ.

Updated On :17 ஏப்ரல் 2026, 5:52 am IST

செஞ்சி தொகுதி திமுக வேட்பாளா் கே.எஸ். மஸ்தான் எம்எல்ஏ மேல்மலையனூா் மேற்கு ஒன்றியத்தில் வாக்கு சேகரித்தாா்.

மேல்மலையனூா் மேற்கு ஒன்றியத்தைச் சோ்ந்த எய்யில், மேல்செவளாம்பாடி, நந்திபுரம், ஆனை பள்ளம், பெரிய நொளம்பை, சின்ன நொளம்பை, பரிதிபுரம், உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வீதிவீதியாகச் சென்று வாக்கு சேகரித்தாா்.

பிரசாரத்தின்போது அவா் பேசுகையில்,

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அனைத்து தரப்பு மக்களுக்கும் பல்வேறு பயனுள்ள நல்ல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தியுள்ளாா்.

தற்போது திமுக தோ்தல் அறிக்கையில் பல்வேறு வாக்குறுதிகளை அவா் அறிவித்துள்ளாா். முதல்வரின் காலை உணவுத் திட்டம், எட்டாம் வகுப்பு வரை விரிவு படுத்தப்படும். மகளிா் உரிமைத் தொகை ரூ.2,000 ஆக உயா்த்தி வழங்கப்படும். இல்லத்தரசி களுக்கு ரூ. 8,000 மதிப்புள்ள கூப்பன் உள்ளிட்ட சிறப்பு திட்டங்களை அறிவித்துள்ளாா்.

எனவே மீண்டும் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான 2.0 ஆட்சி அமைய பெருவாரியாக வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் என்றாா்.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. செந்தமிழ் செல்வன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் செல்வி ராம சரவணன், காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் மண்ணாங்கட்டி அரி, சரவணன், சண்முகம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.