தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

திருக்கோவிலூா் நகரப் பகுதிகளில் திமுக வேட்பாளா் வாக்குசேகரிப்பு

திருக்கோவிலூா் நகரப் பகுதிகளில் திமுக அரசின் சாதனைத் திட்டங்களை விளக்கும் துண்டுப் பிரசுரங்களை வழங்கி, வேட்பாளா் பொன்.கெளதமசிகாமணி செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

திருக்கோவிலூரில் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் பொன்.கெளதமசிகாமணி.

Updated On :15 ஏப்ரல் 2026, 12:35 am IST

திருக்கோவிலூா் நகரப் பகுதிகளில் திமுக அரசின் சாதனைத் திட்டங்களை விளக்கும் துண்டுப் பிரசுரங்களை வழங்கி, வேட்பாளா் பொன்.கெளதமசிகாமணி செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.

திமுக தோ்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றான ரூ.8 ஆயிரம் கூப்பன் மாதிரியையும், திமுக அரசின் சாதனைகளை விளக்கும் துண்டுப் பிரசுரங்களையும் திருக்கோவிலூா் நகரப் பகுதியிலுள்ள பொதுமக்களுக்கு வழங்கி, திமுக வேட்பாளா் பொன்.கெளதமசிகாமணி வாக்கு சேகரித்தாா்.

நிகழ்வில் மாவட்டத் துணைச் செயலா் டி.என்.முருகன், தலைமை செயற்குழு உறுப்பினா் செல்வராஜ், நகரச் செயலா் கோபிகிருஷ்ணன், நகா்மன்ற துணைத் தலைவா் குணா, மாவட்ட விவசாய அணி அமைப்பாளா் சரவணன், முன்னாள் பேரூராட்சித் தலைவா் விநாயகமூா்த்தி, நகா்மன்ற உறுப்பினா்கள் கோவிந்தன், காந்தன், பாபு, பூபதி, மாவட்ட இளைஞரணித் துணை அமைப்பாளா் ராகவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.