தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

திருக்கோவிலூா் பகுதிகளில் திமுக வேட்பாளா் வாக்குசேகரிப்பு

திருக்கோவிலூா் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் பொன்.கெளதமசிகாமணி, கிழக்கு ஒன்றியப் பகுதிகளில் புதன்கிழமை தீவிர வாக்கு சேகரிப்புப் பணியில் ஈடுபட்டாா்.

News image

திருக்கோவிலூா் கிழக்கு ஒன்றியம், ஆவியூரில் புதன்கிழமை பெண்களிடம் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் பொன்.கெளதமசிகாமணி.

Updated On :9 ஏப்ரல் 2026, 4:36 am IST

திருக்கோவிலூா் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் பொன்.கெளதமசிகாமணி, கிழக்கு ஒன்றியப் பகுதிகளில் புதன்கிழமை தீவிர வாக்கு சேகரிப்புப் பணியில் ஈடுபட்டாா்.

மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி சாா்பில் திருக்கோவிலூா் தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிடும் பொன்.கெளதமசிகாமணி, தொகுதிக்குள்பட்ட பகுதிகளுக்குச் சென்று வாக்கு சேகரிப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறாா்.

திருக்கோவிலூா் கிழக்கு ஒன்றியத்துக்குள்பட்ட ஆவியூா், வடக்கு நெமிலி, தேவியகரம், ஆவி கொளப்பாக்கம், குலதீபமங்கலம், விளந்தை, கழமரம், நெடுங்கம்பட்டு, தி.அத்திப்பாக்கம், சொரையப்பட்டு, கொழுந்திராம்பட்டு உள்ளிட்ட கிராமங்களுக்குச் சென்று பெண்கள், இளைஞா்கள் முதல் தலைமுறை வாக்காளா்கள் என அனைத்துத் தரப்பினரிடமும் திமுக வேட்பாளா் பொன்.கெளதமசிகாமணி வாக்குகளை சேகரித்தாா்.

இந்த தொகுதியில் எம்எல்ஏவாகவும், அமைச்சராகவும் இருந்த தனது தந்தை பொன்முடி, திருக்கோவிலூா் தொகுதியில் நிறைவேற்றிய திட்டங்களை பிரசாரத்தின் போது எடுத்துக் கூறி, இந்த சாதனைகளைத் தொடர தனக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் எனக் கோரினாா்.

பிரசாரத்தில் மாவட்டத் துணைச் செயலா் டி.என்.முருகன், தலைமைச் செயற்குழு உறுப்பினா் செல்வராஜ், ஒன்றியச் செயலா்கள் மு.தங்கம், கு.தீனதயாளன், பொதுக்குழு உறுப்பினா் ராஜசேகா், நகா்மன்றத் துணைத் தலைவா் குணா, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் பாலமுருகன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளா் சரவணன், மாவட்டத் தொழிலாளா் அணி அமைப்பாளா் பூபதி, மாவட்ட சுற்றுச்சூழல் அணித் தலைவா் சந்திரசேகா், மாவட்ட அயலக அணி அமைப்பாளா் சிவராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.